மகாராட்டிராவில் பி.ஜே.பி. ஆட்சிக்கு சிக்கல் – கூட்டணிக்குள் குடுமிப்பிடி!

1 Min Read

மும்பை,பிப்.25- மகாராட்டிரத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் -சிவசேனா (உத்தவ் தாக்கரே) ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. இதில் சிவசேனாவில் இருந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணி பிரிந்து பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சியமைத்தது. ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சரானார்.
கடந்த 2024 பேரவைத் தேர்தலில் பாஜக – சிவசேனா (ஷிண்டே) கூட்டணி ஆட்சியைப் பிடித்து பட்னாவிஸ் முதலமைச்சராகவும், ஏக்நாத் ஷிண்டே துணை முதலமைச்சராகவும் பதவியேற்றனர்.

எச்சரிக்கை

தற்போது இருவருக்குள்ளும் கருத்து மோதல் நிலவுவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் 2022இல் மகாராட்டிரத்தில் ஆட்சியைக் கவிழ்த்த என்னை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று பட்னாவிசுக்கு துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து நாக்பூரில் ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், ‘என்னை சாதாரணமாக எடுத்து கொள்ளாதீர்கள். என்னை சாதாரணமாக நினைத்தவர்களிடம், நான் ஏற்கனவே இதைச் சொல்லிவிட்டேன். சாதாரண கட்சி தொண்டர் தான்.
ஆனால், நான் பால் தாக்கரேவின் தொண்டராக இருந்தவன். எல்லோருக்கும் என்னை பற்றி இந்த புரிதல் இருக்க வேண்டும். கடந்த 2022இல், நான் ஆட்சியையே மாற்றினேன். பேரவையில் எனது முதல் உரையில் கூறியபடி, தேர்தல் முடிவுகள் அமைந்தது. அதனால்தான் சொல்கிறேன் என்னை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். இந்த வார்த்தைகள் யாருக்கோ அதை அவர்கள் புரிந்துகொள்வார்கள்’ என்றார். எனவே ஏக்நாத் ஷிண்டே இவ்வாறு கூறியுள்ளது மகாராட்டிர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *