புதுடில்லி ரயில் நிலைய நெரிசலில் 18 பேர் உயிரிழப்பு

viduthalai
1 Min Read

தவறு செய்த அதிகாரிகள்மீது கடும் நடவடிக்கை
மனித உரிமை ஆணையத்தில் காங்கிரஸ் புகார்

புதுடில்லி பிப்.21 புது டில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 18 போ் இறந்தது குறித்து விசாரணை நடத்தக் கோரியும், தவறிழைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் டில்லி காங்கிரஸ் புகார் அளித்ததுள்ளது.

புகார்

இது தொடா்பாக டில்லி காங்கிரஸ் தலைவா் தேவேந்தா் தனது புகாரில் கூறியுள்ளதாவது: மகா கும்பமேளாவில் நீராடலுக்காக பிரயாக் ராஜுக்குச் செல்லும் ஏராளமான பயணிகளும், பிற ரயில்கள் மூலம் பிற இடங்களுக்குச் செல்லும் நூற்றுக்கணக்கான பயணிகளும் புது டில்லி நிலையத்தில் கூடியிருந்தபோதிலும், பெருகிய கூட்டத்தை நிா்வகிக்க ரயில்வே அதி காரிகளும் பாதுகாப்புப் படையினரும் எந்த நட வடிக்கையும் எடுக்க வில்லை. இதனால்தான் இந்த சோக சம்பவம் நிகழ்ந்தது.

மேலும், ரயில்வே அதி காரிகள் நடைமேடைகளில் கூட்டத்தைக் கட்டுப் படுத்த எந்த ஏற்பாடும் செய்யவில்லை. இதன் விளைவாக இந்த துய ரமான நெரிசல் ஏற்பட்டது. ரயில் பெட்டிகள் அல்லது கூட்ட மேலாண்மைக்கு தேவையான ஏற்பாடு களைச் செய்யாமல், பிர யாக்ராஜுக்குச் செல்லும் பயணிகளுக்கு ஒரு மணி நேரத்திற்கு 1,500 டிக்கெட்டுகளை

ரயில்வே எவ்வாறு விற்க முடியும்?
தவறு செய்த அதிகாரிகள்மீது நடவடிக்கை

ஆகவே, இந்த துயரச் சம்பவத்திற்கு காரண மான அதிகாரிகள் மீது கடுமையான மற்றும் விரைவான நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்யவும், காரணமானவா்கள் மீது பொறுப்பை உறுதிப் படுத்தவும் தேசிய மனித உரிமைகள் ஆணைய விசாரணை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *