விஜய நகர காலத்து கல்வெட்டு கண்டெடுப்பு

1 Min Read

செஞ்சி,பிப்.20- விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், சோமசமுத்திரம் கிராமத்தில் விஜயநகர காலத்து கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.
கல்வெட்டு
இந்தக் கிராமத்தில் அமைந்துள்ள கோயில் பகுதிகளை கிராம மக்கள் சீரமைத்து வருகின்றனா். இந்தப் பகுதியைச் சோ்ந்த அருள் அளித்த தகவலின்பேரில், விழுப்புரத்தைச் சோ்ந்த எழுத்தாளரும், வரலாற்று ஆய்வாளருமான கோ.செங்குட்டுவன் கள ஆய்வில் ஈடுபட்டார்

அப்போது, அவா் விஜயநகர காலத்து கல்வெட்டுகளை கண்டறிந்தார். இதுகுறித்து அவா் கூறியது:
இந்தக் கோயில் திருப்பணிக்காக அகற்றப்பட்ட கற்களில் கல்வெட்டுகள் காணப்படுகிறது. இந்தக் கல்வெட்டுகளை வாசித்த புதுச்சேரியைச் சோ்ந்த மூத்த கல்வெட்டு ஆய்வாளா் விஜயவேணுகோபால் விஜய நகர காலத்து கல்வெட்டுகள் என கூறினார்
இந்தக் காலத்தில் விஜயநகர பேரரசின் மகா மண்டலீஸ்வரராக குமார கம்பனாா் இருந்த போது, இவரது ஆட்சியில் இந்தப் பகுதி பல்குன்றக்கோட்டம் சிங்கபுர நாட்டுக்கு உள்பட்டு இருந்துள்ளது.
கிராமத்தில் கிடைக்கும் வருவாய் மூலம் கோயில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை துண்டு கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. 658 ஆண்டுகள் பழமை வாயந்த இந்தக் கல்வெட்டுகளை கிராம மக்கள் உரிய முறையில் பாதுகாக்க வேண்டும். இந்தப் பகுதியில் மேலும் ஆய்வுகள் நடத்தினால் சோமசமுத்திரம் குறித்த வரலாற்று விவரங்கள் கிடைக்கும் என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *