கும்பமேளா சங்கமத்தில் மலக்கழிவு – கிருமிகள் ஆபத்து!

Viduthalai
1 Min Read

இன்று (18.2.2025) ‘இந்து’ பத்திரிகையில் வெளிவந்த செய்தியின் தமிழாக்கம்!
மகா கும்பத்தில், ஆற்று நீரில் மனித கழிவுகளில் உள்ள நுண்ணுயிரிகள் அதிக அளவு கண்டறி யப்பட்டன:
பிரயாக்ராஜில் மகா கும்பத்தின் போது மக்கள் குளித்த ஆற்று நீரில் ‘ஈ கோலிபார்ம்’ (மனித கழிவுகளில் இருந்து வரும் நுண்ணுயிரிகள்) அதிக அளவில் காணப்பட்டதாக ஒன்றிய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு (NGT) சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘‘மனிதர்கள் பயன்படுத்தும் நீர் தரத்திற்கு ஏற்ப ஆற்று நீரின் தரம் மலக்கழிவில் உள்ள ஆபத்தான நுண்ணுயிர் தொடர்பாக பல்வேறு சந்தர்ப்பங்களில் கண்காணிக்கப்பட்ட அனைத்து இடங்களிலும் ஒத்துப்போகவில்லை. மகா கும்ப மேளாவின் போது பிரயாக்ராஜில் புனித நீராடல் நாட்கள் உள்ளிட்ட நாள்களில் ஏராளமான மக்கள் ஆற்றில் குளிப்பது, இறுதியாக மலக்கழிவில் உள்ள ஆபத்தான நுண்ணுயிர் செறிவை அதிகரிக்க வழிவகுத்தது’’ என்று பிப்ரவரி 17 தேதியில் ஒப்படைக்கப்பட்ட அறிக்கையை மேற்கோள் காட்டியது.

‘‘உத்தரப்பிரதேச மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மத்திய ஆய்வகத்தின் பொறுப்பாளரால் ஜனவரி 28, 2025 அன்று அனுப்பப்பட்ட கடிதத்துடன் இணைக்கப்பட்ட ஆவணங்களைப் பரிசீலித்ததில், பல்வேறு இடங்களில் மலக்கழிவில் உள்ள ஆபத்தான நுண்ணுயிர் அதிக அளவில் காணப்பட்டுள்ளது’’ என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பசுமைத்தீர்பாய முதன்மை அமர்வு – தலைவர் நீதிபதி பிரகாஷ் சிறீவாஸ்தவா, நீதித்துறை உறுப்பி னர் நீதிபதி சுதீர் அகர்வால் மற்றும் நிபுணர் உறுப்பினர் செந்தில் வேல் – பிரயாக்ராஜில் கங்கை மற்றும் யமுனை ஆறுகளின் தரம் குறித்த மனுவை விசாரித்து வருகிறது.
பிரயாக்ராஜில் கும்பமேளா பகுதி ஆற்றின் நீர் தரத்தை கண்காணிக்க நியமிக்கப்பட்ட உறுப்பினர்- செயலாளர் மற்றும் மாநில அதிகாரி ஆகியோர் பிப்ர வரி 19 அன்று நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *