வல்லம், பிப். 18- வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் டிவிஎஸ் – டி.எஸ்இ சென்னை நிறுவனம் சார்பாக நேர்காணல் நடைபெற்றது.
17.02.2025 அன்று டிவிஎஸ் – டி.எஸ்இ சென்னை நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு அலுவலர் வெங்கடேசன், இப்பாலிடெக்னிக்கில் நடைபெற்ற வளாக நேர்காணலில் கலந்து கொண்டு 50 மாணவர்களை பணிக்கு தேர்ந்தெடுத்தார்கள்.
பணி ஆணைகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட இப்பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் முனைவர் அ.ஹேமலதா மாணவர்களுக்கு பணி ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்வில் இக்கல்லூரியின் துணைமுதல்வர் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
பெரியார் பாலிடெக்னிக்கில் டி.வி.எஸ். – டி.எஸ்.இ. சென்னை நிறுவனம் நடத்திய வளாக நேர்காணல்

Leave a Comment