ஆந்திர மாநில விஜயவாடா நாத்திகர் மய்யத்தின் செயtttல் வீராங்கனை டாக்டர் மாரு காலமானார்

1 Min Read

ஆந்திர மாநிலம் – விஜயவாடாவில் உள்ள நாத்திகர் மய்யத்தின் செயல்பாட்டாளர் டாக்டர் மாரு (வயது 80) உடல் நலம் குன்றியிருந்த நிலையில் நேற்று முன்தினம் (6.2.2025) நள்ளிரவில் காலமானார்.

ஆந்திர நாத்திக அறிஞர் கோரா – சரஸ்வதி கோரா ஆகியோரின் மகள் டாக்டர் மாரு, நாத்திகர் மய்யத்தின் பணிகளில் முழுமையாக ஈடுபட்டு வந்தவர். குழந்தைப் பேறு மருத்துவரான மாரு, நாத்திகர் மய்யத்தின் மருத் துவம் சார்ந்த களப் பணிகளிலும் ஈடுபட்டு வந்தார்.
தமிழர் தலைவர் அவர்கள்மீது அன்பும், கொள்கை சார்ந்த பற்றும் கொண்டவர். நாத்திகர் மய்யத்திற்குத் தமிழர் தலைவர் செல்லும் நேரங்களில், விருந்தோம்புவதில் தனி அக்கறை நல்குபவராக இருந்தார்.

அவருடைய மறைவு நாத்திகர் மய்யத்திற்குப் பேரிழப்பாகும்.

டாக்டர் மாரு அவர்களின் மறைவுச் செய்தி குறித்து தமிழர் தலைவர் இரங்கல் செய்தியினை அனுப்பியுள்ளார். நாத்திகர் மய்யத்தின் தலைவர் டாக்டர் கோ. சமரம் அவர்களுக்கும், மாரு அவர்களின் வாழ்விணையர் ஹரி சுப்ரமணியம் அவர்களுக்கும் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *