புதுடில்லி, பிப்.5 செங்கல்பட்டு தடுப்பூசி மய்யத்தை தமிழ் நாட்டுக்கு வழங்க தென் சென்னை திமுக எம்.பி. தமிழச்சி தங்கப் பாண்டியன் கோரிக்கை விடுத் துள்ளார்.
இது தொடர்பாக மக்கள வையில் அவர் பேசும்போது கூறிய தாவது: தமிழ்நாட்டின் செங்கல்பட்டில் சுமார் ரூ. 800 கோடி மதிப்பிலான ஒன் றிய அரசின் எச்.எல்.எல். பயோடெக் நிறுவனம் 12 ஆண்டு களாக செயல்படாமல் உள்ளது. இந்த திட்டத்துக் கான ஒப்புதல் வழங் கப்பட்டபோது அது தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப் பட்டது. காரணம், பி.சி.ஜி., தட்டம்மை, ரேபிஸ், ஹெபாடைடிஸ் உள் ளிட்ட 75 சதவீத தடுப்பூசி தேவைகளை இது பூர்த்தி செய்யும் நோக்கத்தை கொண்டிருந்தது. இது இந்தியாவின் சுகா தார பாதுகாப்புக்கு முக்கி யமானது. ஆனால், அந்த நோக்கங்களை நிறைவேற்ற முடியவில்லை.
செயல்படாமல் கிடக்கும் இந்த தடுப்பூசி மய்யத்தை தமிழ்நாடு அரசு பயன்படுத்த முடிவெடுத்து, அதை குத்தகைக்கு வழங்குமாறு ஒன்றிய அரசிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பலமுறை கேட்டுள்ளார். இந்தத் திட்டத்துக்கு நிலம் வழங்கியதே தமிழ்நாடு அரசுதான். அதனால் அதன் செயல்பாட்டுக்கு உரிமை கோருவது ஒரு வகையில் நியாயமாகும்.
எனவே, உள்நாட்டு தடுப்பூசி உற்பத்திக்கான அவசரத் தேவை யையும், மகத்தான வளங்கள் பயன்பாடற்றுக் கிடப் பதையும் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசுக்கு தடுப்பூசி மய்யத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றிய அரசை கேட் டுக் கொள்கிறேன். தமிழ் நாட்டில் தடுப்பூசி உற்பத்தி திறன்களை மேம்படுத்த குன்னூரில் உள்ள பாஸ்டர் நிறு வன செயல்பாடுகளை மீண்டும் முன்னெடுக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.