குடந்தை, பிப்.5- கும்பகோணம் 8 தமிழ்நாடு பட்டாலியன் பட்டாளம் நடத்திய NCC ஏ சான்றுக்கான பயிற்சி சோதனை தேர்வு மற்றும் ஸ்வச் அபியான் மரக்கன்றுகளை நடும் துவக்க விழா 01.02.2025 அன்றும் NCC- ஏ சான்றுக்கான தேர்வு 2.2.2025 அன்றும் கும்பகோணம் நகர மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
அதில் தொடக்கமாக கர்னல் சந்திரசேகர் தேசிய மாணவர் படையில் உள்ள மாணவர்களுக்கு சில அறிவுரைகளை கூறி வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இந்த தேர்வில் 6 பள்ளியிலிருந்து சுமார் 230 மாணவர்கள் பங்கேற்றனர். அதில் ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளியைச் சேர்ந்த 22 மாணவர்கள் தேர்வில் பங்கேற்றார்கள்.