Viduthalai Daily NewspaperViduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Notification Show More
Font ResizerAa
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Reading: நம்மை வழிநடத்தும் தலைவரும், நம் தலைவர்களுக்கெல்லாம் தலைவருமான பகுத்தறிவுப் பகலவன் பெரியார் பிறந்த மண்ணில் நடைபெறும்
Share
Font ResizerAa
Viduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Search
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Follow US
தமிழ்நாடு

நம்மை வழிநடத்தும் தலைவரும், நம் தலைவர்களுக்கெல்லாம் தலைவருமான பகுத்தறிவுப் பகலவன் பெரியார் பிறந்த மண்ணில் நடைபெறும்

Last updated: February 3, 2025 4:00 pm
Published: February 3, 2025
தமிழ்நாடு
SHARE

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில், நல்லாட்சிக்கு மக்கள் தரும் மதிப்பெண்ணாக நம்முடைய தொடர் வெற்றி அமையட்டும்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை, பிப்.3 ‘‘நம்மை வழிநடத்தும் தலைவரும், நம் தலைவர்களுக்கெல்லாம் தலைவருமான பகுத்தறிவுப் பகலவன் பெரியார் பிறந்த மண்ணில் நடைபெறும் இடைத்தேர்தலில், நல்லாட்சிக்கு மக்கள் தரும் மதிப்பெண்ணாக நம்முடைய தொடர் வெற்றி அமையட்டும்’’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடித விவரம் வருமாறு:
நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் நம்பிக்கையுடன் எழுதும் வேண்டுகோள் மடல்.

தந்தை பெரியாரின் பேரன்
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவு
அறிஞர் அண்ணா காலத்திலிருந்து முத்தமிழறிஞர் கலைஞர் காலத்திலும், அவர்கள் இருவருக்குப் பிறகும் தி.மு.கழகம் எத்தனையோ இடைத்தேர்தல் களங்களைச் சந்தித்திருக்கிறது. தற்போது நடைபெறக்கூடிய ஈரோடு கிழக்குச் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் என்பது எதிர்பாராத வகையிலும் மனதில் பெரும் சுமையுடனும் எதிர்கொள்ள வேண்டிய களமாக அமைந்துவிட்டது. 2021 சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்டு வென்றவர் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான ஈவெரா திருமகன் அவர்கள். அவருடைய அகால மரணத்தைத் தொடர்ந்து, 2023 ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் அவரது தந்தையான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் களம் கண்டு மாபெரும் வெற்றி பெற்றார். கடந்த டிசம்பர் மாதத்தில் நம் அனைவரின் அன்பிற்குரிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர், மேனாள் ஒன்றிய அமைச்சர், தந்தை பெரியாரின் பேரன் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களின் அதிர்ச்சி தரத்தக்க மரணத்தால் இந்த இடைத்தேர்தல் களத்தைச் சந்திக்கின்றோம்.

அரசின் சாதனைத் திட்டங்களும்–
மக்கள் உறுதியும்!
இந்த முறை ஈரோடு கிழக்கில் திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிட வேண்டும் என்று தி.மு.க.வினர் விரும்பியது மட்டுமின்றி, அரசியல் சூழலை நன்குணர்ந்த தோழமைக் கட்சியான காங்கிரஸ் பேரியக்கமும் தீர்மானித்து அறிவித்ததைத் தொடர்ந்து, தி.மு.க.,வின் வேட்பாளராக ஈரோடு கிழக்குத் தொகுதி மக்களின் அன்பைப் பெற்ற வி.சி.சந்திரகுமார் களமிறங்கியுள்ளார். அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் தி.மு. கழக நிர்வாகிகளும், உடன்பிறப்புகளும் தொகுதியின் ஒவ்வொரு வீடாகச் சென்று தி.மு.க.வின் மூன்றரை ஆண்டுகால ‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனைகளை எடுத்துரைத்து வாக்கு சேகரித்து வருகின்றனர். தி.மு. கழக அரசின் சாதனைத் திட்டங்களால் ஒவ்வொரு குடும்பமும் பயன் பெற்றிருப்பதால் தங்கள் வாக்குகள் உதயசூரியனுக்கே என்று ஈரோடு கிழக்கு வாக்காளர்கள் உறுதியளித்து வருகின்றனர்.
உங்களில் ஒருவனான எனது தலைமையிலான ‘திராவிட மாடல்’ ஆட்சியில் ஈரோடு மாவட்டத்தின் நலன் சார்ந்த பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மாவட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையிலும்,ஈரோடு மாவட்டத்தின் சிறப்பு மிக்க நெசவுத் தொழில், வணிகம் ஆகியவை வளர்ச்சி பெறும் வகையிலும் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருக்கின்றன. அதில் ஈரோடு கிழக்குத் தொகுதி பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

Also read

தமிழ்நாடு
கடும் எதிர்ப்பால் பணிந்தது ரிசர்வ் வங்கி நகை கடன் வழங்குவதில் புதிய விதிகள்
சக்தி யாருக்கு? சாமிக்கா, மின்சாரத்துக்கா?

ஈரோடு கிழக்குத் தொகுதியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்!
அவற்றில் முதன்மையான சில திட்டங்களை இங்கே குறிப்பிடுகிறேன்.
1. ஈரோடு கிழக்குச் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பெரியசேமூர் வார்டு 20 அம்பேத்கர் நகர் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு பகுதியில் புதிதாக ஆழ்துளைக் குழாய் கிணறு, நீர்மூழ்கி பம்ப் மோட்டார் அமைத்து குடிநீர் விநியோகம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
2. ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட ஆர்.கே.வி. சாலையில் ரூ.29 கோடி மதிப்பீட்டில் புதிய நவீன காய்கறி சந்தை வளாகம் திறக்கப்பட்டு உள்ளது.
3. ஈரோடு ஈ.கே.எம். அப்துல் கனி மதரஸா ஆரம்பப் பள்ளியில் புதிதாக 5 வகுப்பறைகள் மற்றும் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள் துவங்கப்பட்டுள்ளது.
4. ஈரோடு மாநகராட்சி, ராஜாஜிபுரம் பகுதியில் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.7 லட்சம் மதிப்பில் நவீன உடற்பயிற்சிக் கூடப் பணிகள் தொடங்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
5. ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு நிதியில் ரூ.15 லட்சம் ரூபாய் மதிப்பில் கோட்டை முனிசிபல் காலனி மற்றும் பெரியசேமூர்
திரு.வி.க. வீதியில் பள்ளிச் சுற்றுச்சுவர் மற்றும் கழிப்பிடம் அமைக்கப்பட்டுள்ளது.
6. ஈரோடு சூரியம்பாளையம் 7 ஆவது வார்டில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப நகர்நல மய்யத்தின் கூடுதல் கட்டடம் விரிவாக்கப் பணிகள் தொடங்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
7. சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ரூ.10 லட்சம் மதிப்பில் கோட்டைபகுதி வார்டு 28 முனிசிபல் காலனி பகுதியில்அங்கன்வாடி மய்யத்திற்குச் சுற்றுச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது.
8. கருங்கல்பாளையத்தில் 272 பயனாளிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
9. ரூ.2.43 கோடி மதிப்பீட்டில் பிராமண பெரிய அக்ரகாரத்தில் உள்ள பகுதிகளில் குடிசை மாற்று வாரி யத்தின் சார்பில் கட்டட மராமத்து பணி நடைபெற்று வருகின்றன.
10. ஈரோடு மாநகராட்சிப் பகுதிகளுக்கான புதை சாக்கடைத் திட்டம் மீண்டும் தொடக்கப்பட்டு பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.
11. ஈரோடு மாநகராட்சிப் பகுதிகளில் ரூ.1,600 கோடி மதிப்பிலான கூட்டுக் குடிநீர்த் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
12. ஈரோடு மாநகராட்சிப் பகுதிகளில் வாகன நெரிசலைக் குறைத்திட, ஈரோடு வெளிவட்டச் சுற்றுச் சாலை தற்போது நாமக்கல் மாவட்டம் கொக்க ராயன்பேட்டையில் தொடங்கி ஈரோடு மாவட்டம், ஈரோடு – பெருந்துறை – காங்கயம் சாலை வரை 14 கிலோமீட்டருக்கு அமைக்கப்பட்டுள்ளது.
13. ஈரோடு மாநகராட்சிப் பகுதிகளில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் 2024 வரை 1,38,712 பயனாளிகள் பயனடைந்து உள்ளனர்.
14. பாதாள சாக்கடை, ஊராட்சிக்கோட்டை குடிநீர்த் திட்டப் பணிகளால் சேதமடைந்து போக்குவரத்துக்குச் சிரமம் ஏற்படுத்திய காவேரி சாலை முதல் ஆர்.கே.வி. ரோடு மணிக்கூண்டு சந்திப்பு வரை 2 கோடி மதிப்பீட்டில் புதிதாக தார்ச்சாலைகள் அமைக்கப்பட்டது.
15. ஈரோடு மாநகர மய்யப் பகுதியான கோட்டை, மணிக்கூண்டு, கருங்கல்பாளையம், மீனாட்சி சுந்தரனார் சாலை, நேதாஜி சாலை, ஆர்.கே.வி சாலை, முனிசிபல் சத்திரம், கச்சேரி வீதி மற்றும் காரைவாய்க்கால் ஆகிய பகுதிகளில் சுமார் 3000 குடியிருப்புகள், வணிக கட்டடங்களுக்குப் பட்டா வழங்கப்பட்டது.
16. இளைஞர்கள் – மாணவ – மாணவிகளுக்கு, அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., மற்றும் போட்டித் தேர்வுக ளுக்குப் பயிற்சி அளிக்கும் வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கட்டடம் காமராஜர் மேல்நிலைப் பள்ளியில் ரூ.6.17 கோடி மதிப்பீட்டில் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.
17. கருங்கல்பாளையம் வேபிரிட்ஜ் முதல் காவேரி சாலை ஆர்.கே.வி. ரோடு மணிக்கூண்டு வரை இரு பக்கமும் புதிதாகச் சாக்கடைகள் ஆழப்படுத்தி, தளம் அமைத்து கவரிங் சிலாப் முறையில் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.
18. ஈரோடு கிழக்கு தொகுதியில் 10 இடங்களில் சுகாதார மய்யங்கள் ரூ.2.25 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகள்!
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் செயல்பாடுகளை நேரில் கண்டறி வதுடன், புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகளையும் வெளியிடும் வகையில் உங்களில் ஒருவனான நான் மேற்கொள்ளும் மாவட்ட வாரியான ஆய்வுக்கூட்டத்தின் அடிப்படையில் கடந்த டிசம்பர் 19 அன்று ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தின்போது, புதிய பேருந்து நிலையங்களுக்கான பணிகளின் நிலை, மஞ்சள் ஏற்றுமதி மய்யம் – மஞ்சள்தூள் உற்பத்தி மய்யம் ஆகியவற்றின் பணிகள், தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைப்பதற்கான தொடக்கக் கட்டப் பணிகள், மேலும் சில புதிய பணிகள் ஆகியவை குறித்து அதிகாரிகளுடன் ஆய்வுசெய்துஅவற்றை விரைந்து முடிக்க ஆணையிட்டுள்ளேன். தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால், இடைத்தேர்தலுக்குப் பிறகு இந்தப் பணிகள் விரைவு பெறும்.

இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டுள்ள ‘திராவிட மாடல்’ அரசின் முன்னோடித் திட்டங்களான மாதம் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், அரசுப் பள்ளி மாணவிகளின் உயர்கல்விக்கான புதுமைப் பெண் திட்டம், மாணவர்களுக்கான தமிழ்ப்புதல்வன் திட்டம், விடியல் பயணம் திட்டம், காலை உணவுத் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் உள்ளிட்ட பல திட்டங்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் சிறப்பான முறையில் நிறைவேற்றப்பட்டுள் ளன. முதல்வரின் முகவரி, மக்களுடன் முதல்வர் முகாம் ஆகியவற்றில் ஈரோடு கிழக்கு தொகுதியைச் சார்ந்த மக்கள் அளித்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு அவர்களுக்கான குடும்ப அட்டைகள், சான்றிதழ்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. தேவையான இடங்களில் துணை மின்நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

எந்தக் கோரிக்கை வைத்தாலும் அதனை உரிய முறையில் பரிசீலித்து…
கூடுதலாக துணை மின் நிலையங்கள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும், சாயக் கழிவுப் பிரச்சி னைக்கு நிரந்தரத் தீர்வு, குப்பைகளைத் தரம் பிரிக்கும் வசதிகள், புதிய மேம்பாலத் திட்டங்கள், மகளிர் அரசுக் கல்லூரி, வேளாண் கல்லூரி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் விசைத்தறிப் பயிற்சி மய்யங்கள், தோல் பதப்படுத்தும் பயிற்சி மய்யம் உள்ளிட்ட பல கோரிக்கைகளையும் தி.மு.க. வேட்பாளர் வாக்கு சேகரிக்கும்போது ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் வைத்துள்ளனர்.எந்தக் கோரிக்கை வைத்தாலும் அதனை உரிய முறையில் பரிசீலித்து, நிறைவேற்றித் தரக்கூடியதாக ‘திராவிட மாடல்’ அரசு இருக்கிறது என்ற நம்பிக்கைதான், இந்த அரசின் திட்டங்களின் பயனாளிகளான ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் புதிய கோரிக்கைகளை வைப்பதற்குக் காரணம்.
தி.மு.கழக அரசின் மீது தமிழ்நாட்டு மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் வெளிப்பாடுதான், ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் தி.மு.க. வேட்பாளருக்கு வழங்கும் மகத்தான ஆதரவு. இந்த அரசு மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையையும் ஆதரவையும் எப்படியாவது சிதைக்க வேண்டும் என்று நாளொரு அவதூறையும் பொழுதொரு பொய்யையும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பரப்பினாலும் அவை மக்கள் மன்றத்தில் எடுபடுவதில்லை. பொழுது சாய்வதற்குள் எதிர்க்கட்சிகளின் பொய்களும் அவதூறுகளும் பொடிப் பொடியாகிவிடுகின்றன.
தி.மு.க. வேட்பாளரை எதிர்க்க முடியாமலும், பொதுமக்களைச் சந்திக்கும் வலிமையில்லாமலும் அ.தி.மு.க, பா.ஜ.க. ஆகிய கட்சிகள் வழக்கம்போல அவதூறான குற்றச்சாட்டுகளைச் சொல்லி ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலைப் புறக்கணித்துள்ளன. தி.மு.க.வை நேரடியாக எதிர்க்கும் துணிவின்றி சில உதிரிகளைத் தூண்டிவிட்டு, மறைமுக யுத்தம் நடத்திப் பார்க்கின்றன.

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு
தமிழ்நாட்டின் நலனுக்காகப் பாடுபடுகிற தி.மு. கழக அரசையும், தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசையும் தமிழ்நாட்டு மக்கள் சரியாக அடையாளம் கண்டு வைத்திருக்கிறார்கள். அதனை ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் இடைத்தேர்தலில் உதயசூரியனுக்கு அளிக்கும் மகத்தான வெற்றியின் வாயிலாக நிரூபிப்பார்கள்.
ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள்மீதும், அங்கே தேர்தல் பணியாற்றும் தி.மு.க. உடன்பிறப்புகள் மற்றும் தோழமைக் கட்சியின் செயல்வீரர்கள் மீதும் உங்களில் ஒருவனான நான் வைத்திருக்கும் நம்பிக்கையினாலும், என் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையினாலும், நான் நேரில் வந்து வாக்கு சேகரித்ததாகக் கருதி, தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் அவர்களுக்கு பிப்ரவரி 5 ஆம் தேதியன்று உதயசூரியன் சின்னத்தில் பெருவாரியான வாக்குகளை அளித்து மகத்தான வெற்றியை அளிக்குமாறு வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.

பகுத்தறிவுப் பகலவன் பெரியார் பிறந்த மண்ணில்….
நம்மை வழிநடத்தும் தலைவரும், நம் தலைவர்களுக்கெல்லாம் தலைவருமான பகுத்தறிவுப் பகலவன் பெரியார் பிறந்த மண்ணில் நடைபெறும் இடைத்தேர்தலில், நல்லாட்சிக்கு மக்கள் தரும் மதிப்பெண்ணாக நம்முடைய தொடர் வெற்றி அமையட்டும். 2026 சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்குக் கட்டியம் கூறும் வகையில், ‘வெல்வோம் 200 – படைப்போம்’ வரலாறுஎன்பதற்கு முன்னோட்டமாக ஈரோடு கிழக்குதொகுதி இடைத்தேர்தலில் தி.மு.கழகத்தின் மாபெரும் வெற்றியை எதிர்நோக்குகிறேன், உடன்பிறப்புகளின் உழைப்பினாலும்,மக்கள் மீது உள்ள நம்பிக்கையினாலும்!
– இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்

தமிழ்நாட்டின் நலனுக்காகப் பாடுபடுகிற தி.மு. கழக அரசையும்,
தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசையும்
தமிழ்நாட்டு மக்கள் சரியாக அடையாளம் கண்டு வைத்திருக்கிறார்கள்.
அதனை ஈரோடு கிழக்குத் தொகுதி வாக்காளர்கள்
இடைத்தேர்தலில் உதயசூரியனுக்கு அளிக்கும் மகத்தான வெற்றியின் வாயிலாக நிரூபிப்பார்கள்.

Ad imageAd image
ஆளுநர் மாளிகையை ஆர்.எஸ்.எஸ். அலுவலகமாக மாற்றி விட்டாரா கேரளஆளுநர்? நிகழ்ச்சியைப் புறக்கணித்த கேரள மாநில அரசு
இலங்கை தாக்குதலை தடுக்க கச்சத்தீவை மீட்க வேண்டும்
தமிழ்நாட்டில் ‘நடப்போம், நலம் பெறுவோம்’ திட்டம் 2.0 விரைவில் துவக்கம்
பிளஸ்1இல் சேர்க்க மறுக்கும் அரசுப்பள்ளிகள் அரசு தலையிட்டு தடுக்க வேண்டும்
சுங்கச்சாவடி மூலம் கொள்ளை தமிழ்நாட்டில் சுங்கச்சாவடி எண்ணிக்கை 96 ஆக உயர்த்த ஒன்றிய பிஜேபி அரசு முடிவு
TAGGED:முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
Share
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Ad imageAd image
- Advertisement -
Ad imageAd image

நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள்

About US

"Viduthalai" is a Tamil newspaper founded by the social reformer Thanthai Periyar, in 1935. Aimed at promoting rationalism, social justice, and gender equality, it played a crucial role in advocating for the rights of marginalized communities in Tamil Nadu. The newspaper remains significant in the legacy of Periyar’s movement for a more equitable society. Under the able leadership of K. Veeramani, the current editor of "Viduthalai," the newspaper continues to uphold the values of Periyar's vision for social justice and equality. Veeramani, a prominent activist and advocate for rationalism, has revitalized the publication, ensuring it addresses contemporary issues while staying true to its foundational principles.
Quick Link
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Other Links
  • Print Subscription
  • Privacy Policy
  • Contact
Our Other Publications
  • Unmai Magazine
  • The Modern Rationalist
  • Periyar Pinju Children’s Magazine
  • Dravidian Book House
© Viduthalai. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?