பெரியார் கட்டுமானம் அமைப்பு சாரா தொழிற்சங்கத்தின் விழிப்புணர்வு பிரச்சாரம்

1 Min Read

அரசியல்

சென்னை, ஜூலை 16 – வட சென்னையில் மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களிடம் பெரியார் கட்டுமானம் அமைப்பு சரா தொழிற்சங்கத்தின் சார்பில் விழிப்புணர்வுப் பிரச்சாரம் சிறப்பாக நடைபெற்றது.

6.7.2023, மாலை 4 மணிக்கு கன்னிகாபுரம், டிக்காஸ் சாலை, டான்போஸ்கோ பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்க்கு பொதுக்குழு உறுப் பினர் தி.செ.கணேசன் தலைமை வகித்தார். வடசென்னை மாவட்ட திராவிடர் கழகத் தொழிலாளரணி செயலாளர் க.சுமதி, மகளிர் குழுவினர் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்து கொள்வதின் முக்கியத்துவம், பயன்கள் குறித்து சிறப்பான வகையில் மகளிரிடம் எடுத்துக் கூறினார்.

ஸ்கோப் – ஜெயகுமார் நிகழ்ச்சிக்கென சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். வடசென்னை மாவட்ட காப்பாளர் கி.இராம லிங்கம், இளைஞரணி தலைவர் நா.பார்த்திபன், திருவொற்றியூர் பா.பாலு, க.வெண்ணிலா மற்றும் கழகத் தோழர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *