இழப்பீடு வழங்க வேண்டும் என்பதால், மகா கும்பமேளாவில் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை உ.பி. அரசு மறைப்பதாக அகிலேஷ் யாதவ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த விவகாரத்தில் இருந்து மக்களை திசை திருப்ப அரசு முயன்று வருவதாகவும், அரசின் நிர்வாகத் தோல்வியே கூட்ட நெரிசலுக்கு காரணம் எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
யோகி ஆதித்யநாத் ஒரு பொய்யர் என சாதுக்களே விமர்சித்து வருவதாகவும் சாடியுள்ளார்.