வாசிங்டன், ஜன.31 அமெ ரிக்காவின் கன்சஸ் மாகாணம் விஷிதா நகரில் இருந்து 60 பயணிகள், 4 ஊழியர்கள் உள்பட மொத்தம் 64 பேருடன் வாசிங்டன் மாகாணத்திற்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று காலை புறப்பட்டது.
விமானம் வாஷிங்டனில் உள்ள ரோனால்ட் ரீகன் விமான நிலையத்தில் தரையிறங்க நெருங்கிக்கொண்டிருந்தது. அதே நேரத்தில் அமெரிக்க ராணுவத்திற்கு சொந்தமான பிளாக் ஹாக் ஹெலிகாப்டர் ரோனால்ட் ரீகன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. ஹெலிகாப்டரில் 3 ராணுவ வீரர்கள் பயணித்தனர்.
இந்நிலையில், தரையிறங்க முன்ற பயணிகள் விமானமும், புறப் பட்ட ராணுவ ஹெலி காப்டரும் நடுவானில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரும், விமானமும் போடோமாக் ஆற்றில் விழுந்தன. தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். ஆனால், இந்த கோர விபத்தில் பயணிகள் விமானத்தில் பயணித்த 64 பேர், ஹெலிகாப்டரில் பயணித்த 3 பேர் என மொத்தம் 67 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 28 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. எஞ்சியோரின் உடல்களை தேடும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.