காவேரிப்பட்டணம் – பென்னேஸ்வரமடம் மின்தொடரமைப்புக் கழக வளாகத்திற்குள் பிள்ளையார் சிலையா?

viduthalai
1 Min Read

காவேரிப்பட்டணம், ஜன.27 கிருட்டினகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் பென்னேஸ்வர மடம் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழக நிறுவனம் பென் னேஸ்வர மடம் 110/33-11 கி.வோ. துணை மின் நிலைய வளாகத்திற்குள் பிள்ளையார் சிலை  வைக்கப்பட்டுள்ளது.

அரசு அலுவலக வளாகத்திற்குள்ளும், அலுவலகத்திலும் எந்தவித மதச் சின்னங்களும், கடவுளர் படங்களும் சிலைகளும் வைத்து பூசை புனஷ்காரங்கள் செய்யக்கூடாது என்று மாநில, ஒன்றிய அரசு ஆணைகளும், நீதிமன்ற தீர்ப்புகளும் தெளிவாக இருந்தும் அதனை மீறி காவேரிப்பட்டணம் பென்னேஸ்வரமடம்  110/33-11 கி.வோ. துணை மின் நிலைய வளாகத்திற்குள் அரசு ஆணைகளுக்கு புறம்பாக  வைக்கப்பட்டுள்ள பிள்ளையார் சிலையை அகற்ற கிருட்டினகிரி மாவட்ட ஆட்சித் தலைவரும், சம்பந்தப்பட்ட மின்சார வாரிய அதிகாரிகளும் அகற்ற  நடவடிக்கை மேற்கொள்வார்களா?

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *