பெரியார் பாலிடெக்னிக்கில் ‘சென்னை இந்தியா யமஹா நிறுவனம்’ நடத்திய வளாக நேர்காணல்

Viduthalai
1 Min Read

வல்லம், ஜன. 26- பெரியார் நூற்றாண்டு பாலி டெக்னிக் கல்லூரியில் சென்னை இந்தியா யமஹா நிறுவனம் சார்பாக நேர்காணல் நடைபெற்றது. வல்லம் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் ஒவ்வொரு ஆண்டும் புகழ்பெற்ற கம்பெனிகளை வரவழைத்து வளாக நேர்காணல் மூலம் மாணவ, மாணவிகளுக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படுகிறது.
24.01.2025 அன்று சென்னை இந்தியா யமஹா நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு அலுவலர் அருண் இப்பாலிடெக்னிக்கில் நடைபெற்ற வளாக நேர்காண லில் கலந்து கொண்டு 60 மாணவர்களை பணிக்கு தேர்ந்தெடுத்தார்கள். பணி ஆணைகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட இப்பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் முனைவர் அ.ஹேமலதா மாணவர்களுக்கு பணி ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்வில் இக்கல்லூரியின் துணைமுதல்வர் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *