தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (24.1.2025) சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் நடைபெற்ற கலைத் திருவிழாவில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கலையரசன், கலையரசி விருது. பரிசுக் கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, பள்ளிக்கல்வித் துறைச் செயலாளர் சோ.மதுமதி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் பொ.சங்கர், மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் மரு.மா.ஆர்த்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள். மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.