‘மோகனா வீரமணி’ கல்வி அறக்கட்டளையின் 21ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா

Viduthalai
10 Min Read

கண்ணந்தங்குடி கீழையூரில் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் விழா – திராவிடர் திருநாள் கலை நிகழ்ச்சிகள்

உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் பங்கேற்று சிறப்பித்தார்

 

கீழையூர், ஜன.19 தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல்விழா – திராவிடர் திருநாள், கலைநிகழ்ச்சி பெரியார் படிப்பகம் மற்றும் “மோகனா வீரமணி” கல்வி அறக்கட்டளை 21-ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா பொதுக்கூட்டம் கண்ணந்தங்குடி கீழையூரில் எழுச்சியுடன் நடைபெற்றது. உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் பங்கேற்று பாராட்டுரை.

ஜனவரி – 14
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வடக்கு ஒன்றியம், கண்ணந்தங்குடி கீழையூர் பெரியார் படிப்பகம் அருகில் 14.01.2025 தை – 1 அன்று மாலை 5 மணியளவில் திராவிடர் கழகம் சார்பில் தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல்விழா – திராவிடர் திருநாள், கலைநிகழ்ச்சி பெரியார் படிப்பகம் 21-ஆம் ஆண்டு விழா “மோகனா வீரமணி” கல்வி அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு 21-ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா பொதுக்கூட்டம் மிக எழுச்சியுடன் நடைபெற்றது.

இசை நிகழ்ச்சி
மாலை 5 மணிக்கு தொடங்கி திராவிடர் கழக கலைத்துறை மற்றும் புரட்சிக்கவிஞர் கலைக்குழுவினர் தெற்கு நத்தம் ச.சித்தார்த்தன் பாவலர் பொன்னரசு, முருகு.தமிழினியன் ஆகியோர் இணைந்து வழங்கிய இசைநிகழ்ச்சி 6.30 மணி வரை மிக எழுச்சியுடன் நடைபெற்றது.

விழா தொடக்கம்
மாலை சரியாக 6.30 மணிக்கு பொதுக்கூட்டம் தொடங்கியது. இசை நிகழ்ச்சி நடத்திய குழுவி னருக்கு மாவட்டத்தலைவர் சி.அமர்சிங், மாவட்ட துணைத்தலைவர் பா.நரேந்திரன், மாவட்ட துணைச்செயலாளர் ரெ.சுப்ரமணியன், மாநகர இணைச்செயலாளர் இரா.வீரக்குமார், ஒரத்தநாடு நகரத்தலைவர் பேபி.ரெ.ரவிச்சந்திரன், நகரச் செயலாளர் பு.செந்தில்குமார் திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரபாண்டியன் ஆகியோர் பயனாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.

அனைவரையும் வரவேற்று பொறியாளர் அரங்க.குமரவேல் உரையாற்றினார். ஒரத்த நாடு வடக்கு ஒன்றியத் தலைவர் இரா.துரைராசு நிகழ்விற்கு தலைமையேற்று உரையாற்றினார். கிளைக்கழக செயலாளர் ப.தாமரைக்கண்ணன், ஒரத்தநாடு வடக்கு ஒன்றியச்செயலாளர் அ.சுப்பிரமணியன், மாநில இளைஞரணி துணைச்செயலாளர் இரா.வெற்றிகுமார், ஒரத்தநாடு நகரத்தலைவர் பேபி.ரெ.ரவிச்சந்திரன், திருவோணம் ஒன்றியத்தலைவர் சாமி.அரசிளங்கோ, நகரச் செயலாளர் பு.செந்தில்குமார், தஞ்சை தெற்கு ஒன்றியத் துணைத்தலைவர் நா.வெங்கடேசன், கிளைகழகத் தலைவர் இரா.செந்தில்குமார், ஊரச்சி அ.திருநாவுக்கரசு, ஒன்றிய இளைஞரணி துணைச்செயலாளர் இரா.இராஜதுரை, வடக்கு ஒன்றிய மாணவர் கழகச் செயலாளர் க. செழியன், நகர இளைஞரணி செயலாளர் மா.சாக்ரட்டீஸ் ஆகியோர் முன்னிலையேற்று உரையாற்றினார்கள்.
மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி ஆகியோர் தொடக்கவுரையற்றினார்கள். மாநில ஒருங் கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன் ஆகியோர் பாராட்டுரையாற்றினர்.

தஞ்சாவூர் மத்திய மாவட்டச் செயலாளர், திருவையாறு சட்டமன்ற திமுக உறுப்பினர் துரை.சந்திரசேகரன், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.இராமச்சந்திரன் தஞ்சாவூர் மாநகராட்சி துணைமேயர், திமுக மருத்துவரணி மாநில துணைச்செயலாளர், டாக்டர் அஞ்சுகம் பூபதி, நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி ஆகியோர் பாராட்டுரையாற்றினார்கள்.

அரசு பள்ளிக்கு உதவித்தொகை வழங்கி பாராட்டுரை
கண்ணந்தங்குடி கீழையூர் அரசு உயர் நிலைப்பள்ளி மாணவர்களின் தனிப்பயிற்சிக்கு “மோகனா வீரமணி” கல்வி அறக்கட்டளை சார்பில் ரூ.10,000/- உதவித்தொகை வழங்கி கோபிச்செட்டிப்பாளையம் நம்பியூர் காமராஜ் கல்வி நிறுவனத்தின் தாளாளர் என்.கே. ஜவகர் மனிதம் சட்ட உதவி மய்யம் நிறுவனர், கோபி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் நம்பியூர் வழக்குரைஞர் மு.சென்னியப்பன் ஆகியோர் பாராட்டுரையாற்றினார்கள்.

மோகனா வீரமணி கல்வி அறக்கட்டளை பரிசளிப்பு
2023 – 2024 – ஆம் கல்வி ஆண்டில் கண்ணந்தங்குடி கீழையூர் அரசு உயர்நிலைப் பள்ளி 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர் ஆ.ஆகாஷ், இரண்டாம் மதிப்பெண் பெற்ற மாணவர் ரா.ஜெயசிறீ, மூன்றாம் மதிப்பெண் பெற்ற மாணவர் கி.சிவனேசன், கண்ணந்தங்குடி மேலையூர் பள்ளி முதல் மதிப்பெண் பெற்ற மாணவர் ப.அபிநயசிறீ, இரண்டாம் மதிப்பெண் பெற்ற மாணவர் லெ.ஜெயலெட்சுமி, மூன்றா மிடம் பெற்ற ஜெ.ஜெயதர்ஷினி ஆகியோ ருக்கு தலா ரூ. 5,000/-, ரூ. 3,000/-, ரூ. 2,000 ஊக்கத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் “மோகனா வீரமணி” கல்வி அறக்கட்டளை சார்பில் வழங்கி பாராட்டுரையாற்றினார். உயர் கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன்.

அமைச்சர் முனைவர் கோவி.செழியன் உரை

கழகம்
விழாவில் பங்கேற்ற உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் சிறப்புரையாற்றினார். பெரியார் நாடாம் ஒரத்தநாடு பகுதியில் திராவிடர் கழகத்தின் கோட்டையாக திகழக்கூடிய திராவிட இயக்கத்தின் விழுதாக, வேராக இருக்கக் கூடிய கண்ணந்தங்குடி கீழையூ ரில் பொங்கல் விழாவையும், “மோகனா வீரமணி” கல்வி அறக்கட்டளையின் பரிசளிப்பு விழாவினையும் நடத்திக் கொண்டிருக்கிறோம் என்று சொன்னால் நமது ஆசிரியர் அவர்கள் இந்த நிகழ்வின் ஒவ்வொரு அசைவையும் கவனித்து வருகிறார்கள்.

பொங்கல் நாள் அன்று ஒன்றிய அரசு யு.சி.ஜி. தேர்வு அட்டவணை வெளியிட்டதை ஆசிரியர் எதிர்த்தார், முதலமைச்சர் எதிர்த்தார், நமது துறையின் சார்பில் நாமும் எதிர்த்தோம். 12 நாள்கள் தூங்கிய பின்பு எதிர்ப்பின் விளைவாக ஒன்றிய அரசு யு.சி.ஜி. தேர்வை தள்ளி வைத்துள்ளது.

இந்தியாவில் எங்கும் எதிர்ப்பில்லை தமிழ்நாட்டில் ஏன் எதிர்ப்பு வருகிறது. இது பெரியார் மண் எதையும் ஏன், எதற்கு என்று கேள்வி கேட்கும் தைரியத்தை உருவாக்கி சென்றுள்ளார் பெரியார் அதனால் மாநில உரிமை பறிக்கப்படும் போதெல்லாம் தமிழ் நாட்டில் எதிர்ப்புக் குரல் முதல் மணி அடிக்கும் மாநிலம் தமிழ் நாடாக உள்ளது.

அரசியல் குருடர்கள்
பெரியார் என்ன செய்தார் என்று கேட்கும் குருடர்களுக்கு சொல்லுகிறேன் பெரியார் திடலில் ஆசிரியர் வீரமணி இருக்கிறார் இன்றைக்கும், இந்த வயதிலும் படிக்கிறார். பாடம் நடத்துகிறார் இந்த வயதிலும் அவரிடம் சென்று பாடம் படியுங்கள், உங்களுக்கு புத்தி வரும். திராவிடர் இயக்க தலைவர்களுக்கு நூற்றாண்டு விழாவினை காணுகின்ற இயக்கம் இந்தியாவிலேயே திராவிட இயக்கம்தான் வேறு எங்கேயும் உண்டா இந்த சாதனை? தமிழ்நாடு அரசின் சார்பில் கண்ணையின் மைந்தன் அய்யா மொழிப்போர் தளபதி எல்.ஜி.க்கு அறிஞர் அண்ணா விருதினை நாளை முதலமைச்சர் வழங்குகிறார். இன்று தாய்க் கழகத்தின் இந்த விழாவும் அவருக்கான பரிசுதான். அவர் பிறந்த ஊரில் இந்த விழா தமிழ் மொழியை சீர்திருத்தம் செய்து இன்று கணினியில் பயன்படுத்தும் வகையில் உருவாக்கியவர் பெரியார். பெரியார் என்ன செய்தார் என கேட்போருக்கு இதுதான் பதில் பன்மொழி புலவருக்கு வராதது, பாரதியாருக்கு வராதது, தமிழ்மொழி வளர்ச்சியில் பெரியாருக்குதான் அக்கறை வந்தது.

பெரியாருக்கு ஏற்படாத இடர்ப்பாடா?
இந்த விழாவிற்கு பல இடர்பாடுகளை தாண்டி அமைச்சர் வருகை தந்துள்ளார் என இங்கு பேசிய அண்ணன் ஜெயக்குமார் சொன்னார் நம்மையெல்லாம் உருவாக்கிய பெரியாருக்கு ஏற்படாத இடர்பாடா நமக்கு வந்தது. கல்லால் அடித்தார்கள், சொல்லால் அடித்தார்கள், முட்டையால் அடித்தார்கள் எல்லாவற்றையும் தங்கிக் கொண்டுதான் பெரியார் பயணித்தார் பணியாற்றினார். பெரியாருக்கு ஏற்பட்ட இடர்பாடுகளில் 1000-த்தில் ஒரு பங்கு இடர்பாடு கூட இப்போது கிடையாது. இங்கு பேசிய துணை மேயர் சொன்னார் அமைச்சர் பொறுப்பேற்ற நாள் முதல் அனைத்து நிகழ்விலும் ஓடோடி கலந்து கொள்கிறார் என்றார்.

நான் அவருக்கும் சொல்வேன், எதிரே அமர்ந்துள்ள அனைவருக்கும் சொல்லுவேன் கருப்புச் சட்டை அழைத்தால் ஓடோடி வரும் தொண்டன் கோவி.செழியன் இது தலைநகருக்கு பொருந்தும் அதற்கு காரணம் அதற்கான தேவை தற்போது அதிகமாக உள்ளது. திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் பெரியாரின் கொள்கையை சட்டமாக்கி தமிழ் நாட்டில் செயல்படுத்த முயலும்போது ஒன்றியத்தில் உள்ள ஆட்சி அதை தடுக்க முட்டுக்கட்டை போடுகிறது. ஒன்றிய அரசை வீழ்த்தி வென்றெடுக்கும் சக்தி தமிழ் நாட்டில் திராவிடர் கழகத்திற்கு உண்டு. ஆசிரியர் அவர்களின் துணைவியார் “மோகனா வீரமணி” பெயரில் உள்ள அறக்கட்டளை விழாவில் பங்கேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். விழா ஏற்பாட்டாளர்களை பாராட்டுகிறேன். விடைபெறுகிறேன் நன்றி என்று தனது உரையில் குறிப்பிட்டார்.

ச.பிரின்சு என்னாரசு பெரியார் உரை
இறுதியாக திராவிடர் கழக துணைபொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரசு பெரியார் சிறப்புரையாற்றினார். பொங்கல் விழாவின் சிறப்பு தந்தை பெரியார் பொங்கல் விழாவினை ஏன் ஆதரித்தார் என்பதற்கான விளக்கத்தை எடுத்துக் கூறினார்.
தமிழ்நாட்டில் ஆளுநர் என்று ஒருவர் உள்ளார். அவர் பொங்கல் விழாவிற்கு வாழ்த்து சொல்கிறார். அதில் பொங்கல் என்ற வார்த்தை ஒரு இடத்திலும் இல்லை. லோகிரி, மகரசங்கராந்தி, புத்தராயமிகை இந்த விசேஷ மிக்க நாளில் அனைவருக்கும் அன்பான வாழ்த்துகள். பொங்கல் என்றோ தமிழர் திருநாள் என்றோ ஒரு வார்த்தை கூட கிடையாது என்றால் பார்ப்பனத் திமிர் எப்படிப்பட்டது என்பதை இந்த மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். நாடு முழுவதும் பெரியார் படிப்பகங்கள் உண்டு. சிறப்பாக செயல்படக்கூடிய படிப்பகங்களில் கண்ணந்தங்குடி கீழையூர் படிப்பகம் சிறப்புக்குரியது. இளைஞர்கள் அதிகம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மோகனா அம்மையாரே விரும்பாத நிலையில் அவர் பெயரில் அறக்கட்டளையை அமைத்து 21 ஆண்டுகளாக விழா நடத்துவது சிறப்புக்குரியது விழாவில் பங்கேற்பதற்கான வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் நன்றி என தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

இறுதியாக மாணவர் கழகத் தோழர் எலந்தவெட்டி க.ஆதவன் நன்றி கூறினார்

ஊரே விழாக்கோலம்
பொங்கல் விழாவினை முன்னிட்டு கண்ணந்தங்குடி கீழையூர் முழுவதும் கழகக்கொடிகள் கட்டப்பட்டு பட்டொளி வீசின. ஒரத்தநாடு முதல் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு நிகழ்ச்சி குறித்த விளம்பரம் மற்றும் வரவேற்பு பதாகைகள் சுவரொட்டிகள் பளிச்சிட்டன, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கபட்டிருந்தன, எழிலான மேடை அமைப்பு பார்வையாளர்களும் பந்தல் அமைப்பு அனைத்தும் ஜே.கே. பந்தல் அமைப்பாளர் மற்றும் பேபி சவுண்ட்சிஸ்டம் ஆகியோரின் ஏற்பாட்டில் மிகச் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன ஊரே விழாக்கோலம் பூண்டிருந்தன.

பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு

கழகம்
கண்ணந்தங்குடி கீழையூரில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் முழு உருவச்சிலைக்கு இரா.ராஜதுரை அ.வெ.கருணாநிதி ஆகியோர் மாலை அணிவித்தனர்.

பெரியார் படிப்பகத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாண்புமிகு உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்வில் பங்கேற்றோர்

கழகம்
மன்னார்குடி மாவட்டத்தலைவர் ஆர்.பி.எஸ். சித்தார்த்தன், மாவட்ட துணை தலைவர் இன்பக்கடல், ஆர்.எஸ்.அன்பழகன், பட்டுக்கோட்டை மாவட்டத்தலைவர் பெ.வீரையன், மாவட்ட ப.க.செயலாளர் இரா.காமராஜ், மாவட்ட ப.க அமைப்பாளர் மாணிக்க. சந்திரன், குமபகோணம் மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் கு.நிம்மதி, மாநில ப.க.அமைப்பாளர் சி.இரமேஷ், விடுதலை வாசகர் வட்ட தலைவர் கே.ஆர்.பன்னீர் செல்வம், கவுதம்,மாநில ப.க ஊடகப்பிரிவுத்தலைவர் மா.அழகிரிசாமி, மாநில இளைஞரணி துணைச்செயலாளர் முனைவர் இராஜவேல், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆ.பிரகாஷ், நகர இளைஞரணி தலைவர் ச.பிரபாகரன், வடசேரி ஞான சிகாமணி, மாவட்ட மகளிரணி தலைவர் அ.கலைச்செல்வி, மாவட்ட கலை இலக்கிய அணித்தலைவர் வெ.நாராயணசாமி, சடையர் கோவில் குழந்தைவேல், கோடையிடி கோவிந்தன், இராஜகோபால்,ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய விவசாய அணி செயலாளர் கோவி.ராமதாஸ், தலையாமங்கலம் சுந்தர.பாஸ்கர், குலமங்கலம் மணியன், கு.தருமராசு, கணேசன், வடக்கு ஒன்றிய துணைச்செயலாளர் இராமமூர்த்தி, ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய விவசாய அணி தலைவர் மா.மதியழகன், மண்டலக்கோட்டை பர்தீன், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் அ.இராமலிங்கம், வடக்கு ஒன்றிய இளைஞரணி துணைத்தலைவர் சுரேந்திரன், மாவட்ட ப.க அமைப்பாளர் கு.கவுதமன், தஞ்சை மாநகர துணைச்செயலாளர் இரா.இளவரசன், மாவட்ட ப.க. துணைத்தலைவர் ஜெ.பெரியர்கண்ணன், கண்ணைதோழர்கள், பொன்.பாலசுப்ரமணியன், ஜெ.சரவணன், எஸ்.எம்.அண்ணாதுரை, கு.கவுதமன், க.செ.கபிலன், கு.அறிவன்பு, ஜெ.ஜெ.கவின், ஜெ.ஜெ.காவியா,க.செ.கவுசல்யா,அ.வெ.கயல், அ.வெ.கருணாநிதி, வெ.அவந்திகா, ஜெகதாராணி, கலாலெட்சுமி, ஜெயமணிகுமார், கழக பேச்சாளர் காரைக்குடி என்னாரசு பிராட்லா, காப்பாளர் சாமி.திராவிடமணி, பொதுக்குழு உறுப்பினர் ஜெயாதிராவிடமணி, பட்டுக்கோட்டை மாவட்ட ப.க தலைவர் ரெத்தினசபாபதி, பேராசிரியர் தீபிகா, தி.மு.க ஒரத்தநாடு கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெ.கார்த்திகேயன், மேற்கு ஒன்றிய செயலாளர் பகுத்தறிவாளர் கழக மாவட்ட இணைச்செயலாளர் ஆ.லெட்சுமணன் செல்ல.ரமேஷ்குமார், தெற்கு ஒன்றிய செயலாளர் மா.முருகையன், ஒன்றிய பெருந்தலைவர் பார்வதி சிவசங்கர், மாவட்டக்குழு உறுப்பினர் சுபா.ஆனந்தன், பொதுக்குழு உறுப்பினர் திராவிடக்கதிரவன், மாவட்ட தி.மு.க வழக்கறிஞரணி அமைப்பாளர் மணவழகன், மாவட்ட வழக்குரைஞரணி பொருளாளர் தவ.ஆறுமுகம், கக்கரை ஊ.ம.தலைவர் தமிழ்மணி, திமுக பொறுப்பாளர், பால.பாரதிதாசன், திமுக நகரச்செயலாளர் R.கிருஷ்ணக்குமார் ஒன்றியக்குழு உறுப்பினர் ப.சிலம்பரசன், ஒன்றியக்குழு உறுப்பினர் கல்பனா, சேதுராயன்குடிக்காடு மு.ஊ.ம.தலைவர் பிரபாகரன், ஈரோடு மாவட்ட ஆதித்தமிழர் பேரவைத்தலைவர் பொன்னுசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் துரைராசு, திமுக இலக்கிய அணி குடிக்காடு இளங்கோவன், பாலமுத்தூர் மு.ஊ.ம.தலைவர் சிட்டிபாபு, பூவத்தூர் சிவசங்கர், கண்ணை மேற்கு செல்வம், அ.தமிழ்ச்செல்வன், ஈரோடு வடக்கு மாவட்ட நெசவாளர் அணிச்செயலாளர் நம்பியூர் சி.சண்முகம், கண்னை ஆர்.ஏ.ஜி. மகேந்திரன் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் அன்பரசி ராஜசேகர் ஆசிரியர் ராசயன், கந்தசாமி உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

 

மோகனா வீரமணி அறக்கட்டளைக்கு
நன்கொடை வழங்கியோர்
1. முகமது அயூப் (மகான் அரிசி ஆலை) – ரூ.25,000
2. உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் – ரூ.10,000
3. தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி – ரூ.10,000
4. நம்பியூர் காமராஜ் கல்வி நிறுவனங்களின் தாளாளர் என்.கே.ஜவகர் – ரூ.10,000
5. பொறியாளர் கோ.இரவிச்சந்திரன், தஞ்சை – ரூ. 5,000

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *