புதுடில்லி, ஜன.19– உக்ரைனுக்கு எதிராக போரிட ரஷ்ய ராணு வத்தில் பணியாற்றிய 16 இந்தி யர்களை காணவில்லை என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரண்தீர் ஜெய்ஸ் வால் தெரிவித்தார்.
இதுதொடர்பாக டில்லியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உக்ரைனுக்கு எதிராக போரிட ரஷ்ய ராணுவத்தில் 126 இந்தி யர்கள் பணியாற்றினர். அவர்க ளில் 96 பேர் இந்தியா திரும்பி விட்டனர். போரில் 12 இந்தியர் கள் கொல்லப்பட்ட நிலையில், 16 பேரை காணவில்லை என்று ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த 16 பேரின் குடும்பங்க ளுடன் வெளியுறவு அமைச்ச கம் தொடர்பில் உள்ளது. காணாமல் போனவர்கள் எங்குள்ளனர் என் பதை தெரிந்துகொள்வதற்கும், எஞ்சிய இந்தியர்களை விரைந்து தாயகம் அனுப்பவும் ரஷ்ய அதிகாரிகளுடன் வெளியுறவு அமைச்சகம் தொடர்பில் இருந்து வருகிறது.
ரஷ்ய ராணுவத்தில் பணியாற் றிய பினில் (கேரளத்தைச் சேர்ந் தவர்) என்பவர் உயிரிழந்ததை அண்மையில் வெளியுறவு அமைச் சகம் உறுதி செய்த நிலையில், அவரின் உடலை இந்தியா கொண்டு வருவதற்கு ரஷ்ய தலைநகர் மாஸ் கோவில் உள்ள இந்திய தூதரகம் ஆவன செய்து வருகிறது.
ரஷ்ய ராணுவத்தில் பணி யாற்றி காயமடைந்த மற்றொரு கேரள நபர், மாஸ்கோ மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரு கிறார். அவர் சிகிச்சைக்குப் பின், இந்தியா திரும்புவார் என்ற நம்பிக்கை உள்ளது.
தளபதி கருத்துடன்
முரண்பாடில்லை
கிழக்கு லடாக் எல் லையில் இந்திய, சீன ராணுவத் தினர் இடையே மோதல்போக்கு போன்ற சூழல் சிறிதளவு நீடிப்பதாக ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி அண்மையில் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் அவரின் கருத்திலும், வெளியுறவு அமைச்சகத்தின் நிலைப்பாட்டி லும் எந்த முரண்பாடும் இல்லை என்றார்.
கடந்த 2020-ஆம் ஆண்டு கிழக்கு லடாக்கில் உள்ள கல் வான் பள்ளத்தாக்கில் இந்திய- சீன ராணுவத்தினர் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, அங்கு இரு நாடுகளும் ஆயிரக்க ணக்கான வீரர்களைக் குவித்தன. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே எல்லையில் மோதல் போக்கு நீடித்து வந்தது.
எல்லையில் உள்ள டெப் சாங். டெம்சோக் பகுதிகளில் இருந்து இருநாட்டு வீரர்கள் கடந்த ஆண்டு அக்டோபரில் திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் 4 ஆண்டு களுக்குப் பின்னர் முன்னேற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில், சீனாவின் ஹோட்டன் பகுதியில் புதிதாக 2 மாவட்டங்களை உருவாக்கி அந் நாடு அறிவிப்பு வெளியிட்டது. அந்தமாவட்டங்களின் சில இடங் கள் லடாக்கின் அதிகார வரம்புக் குள்பட்டவை என்பதால், சீனா வின் அறிவிப்புக்கு ஒன்றிய அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டது.