பெரியாரில் இறங்குதல்… – ஆரூர் புதியவன்

0 Min Read

அதிகாலை வேளையில்
மதுரையில் நுழைந்த
பேருந்தில்,
‘பெரியாரில் இறங்கறவங்க
தயாராக இருங்கள்’
என்று
எழுப்பினார் நடத்துநர்.

பெரியாரில் இறங்க வேண்டியவர்
எதற்கு தயாராக வேண்டும்..?
என்றது மனது.
எதற்கும்தான்
தயாராக வேண்டும்
என்றது அறிவு.

பெரியார் பேருந்து நிலையம்
வந்தது.

தயாராக இருந்த
பயணிகளை
நடத்துநர் அழைத்தார்..

‘பெரியார்லாம்
வாங்க’
என்று

பெரியாரில் இறங்கத்
தயாராக இருந்த
சிறியார்களும்
பெரியார்களாகவே
இறங்கினர்…

அவ்வேளை
மண்ணில் அந்தகார இருள்
அகலத் தொடங்கியது..
பகலவன் வீசிய
பளிச்செனும் ஒளியில்
எல்லாம்
ஒளிரத் தொடங்கியது..!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *