கிடுகிடுக்கிறது டில்லி! அரசுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்! விவசாய சங்கத் தலைவர் கைது!

viduthalai
1 Min Read

மும்பை, டிச.5- அரசுக்கு எதிராக போராட்டத்தை முன் னெடுத்துள்ள விவசாய சங்கத்தின் தலைவர் ராகேஷ் டிகாய்ட் சிறை பிடிக்கப்பட்டுள்ளார்.

விவசாயிகளின் பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி, உத்தரப் பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து டில்லியை நோக்கி நூற்றுக்கணக்கான விவசாயிகள் 2.12.2024 அன்று பேரணியாக புறப்பட்டனா். பாரதிய கிசான் யூனியன், பாரதிய கிசான் பரிஷத், சம்யுக்த கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூா் மோர்ச்சா அமைப்புகள் சார்பாக இந்தப் பேரணி முன் னெடுக்கப்பட்டது. இந்த நிலையில், தங்கள் போராட்டத்தை நேற்று (4.12.2024) தீவிரப்படுத்த பாரதிய கிசான் யூனியன் முடிவு செய்தது. இதனிடையே, கிரேட்டர் நொய் டாவில் விவசாயிகள் சங்க தலை வர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க சென்ற பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் டிகாய்ட், அலிகார் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவருடன் சேர்த்து விவசாய சங்கப் பிரதிநிதிகள் பலர் கைது செய்யப்பட்டு டப்பால் காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

விவசாயிகளை எத்தனை காலம் சிறைப்பிடித்து வைக்க அரசு நிர்வாகத்தால் இயலும் என்றும் கேள்வி எழுப்பியுள்ள ராகேஷ் டிகாய்ட், இத்தகைய நடவடிக்கைகளை அதிகாரிகள் கையிலெடுத்தால், விவசாயிகளின் போராட்டம் மேலும் தீவிரமடையும் என்றும் எச்சரித்துள்ளார்.
கடந்த 1997-ஆம் ஆண்டுமுதல் உத்தரப் பிரதேசத்தில் தங்களிடம் இருந்து அரசு கையகப்படுத்திய நிலங்களுக்கு போதிய இழப்பீடு வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கிரேட்டர் நொய்டாவின் ஸீரோ பாய்ண்ட் பகுதியில் நூற்றுக் கணக்கான விவசாயிகள் நேற்று (4.12.2024) திரண்டு அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *