உ.பி. சாமியார் ஆட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமனமாம்!
கோரக்பூர் (உ.பி.) நவ.22 சாமியார் முதல மைச்சரின் சொந்தத் தொகுதியான கோரக்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் ‘‘வட்டாட்சியர், இணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், கணக்காளர் போன்ற பதவிகள் ஒப்பந்த அடிப்படையில் தர கோரக்பூர் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து சாமியார் முதலமைச்சரின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது’’ என்று கூறப்பட்டுள்ளது. அதனடிப்படையில் நாளிதழ்களில் விளம்பரம் செய்துள்ளது
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள வட்டங்களில் பணிபுரிய வட்டாட்சியர், துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், அலுவலக கணக்காளர் போன்ற பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேவைப்படுகின்றனர்.
மக்கள் பணியில் ஆர்வமுள்ள தேவையான கல்வித்தகுதி உடைய நபர்கள் 7.12.2024 –ஆம் தேதிக்குள் தங்களது விண்ணப்பங்களை அனுப்பவேண்டும் அதற்கு மேல் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது என்று அந்த விளம்பரத்தில் உள்ளது
18.11.2024 அன்று வெளியான விளம்ப ரத்தில் வட்டாட்சியருக்கு ரூ.35,000, இணை வட்டாட்சியருக்கு ரூ.30,000, வருவாய் ஆய்வாளருக்கு ரூ.29,000 மற்றும் அலுவலக கணக்காளருக்கு ரு.27,000 மாத ஊதியமாகத் தரப்படும் என்று பட்டியலிடப்பட்டுள்ளது
இது தொடர்பாக கோரக்பூர் நகர நிர்வாகத்தின் சார்பில் மேலும் கூறப்பட்டுள்ள தாவது:
‘‘தேர்தெடுக்கப்பட்ட 9 பேர்களுக்கு அழைப்பு அனுப்பப்படும். அதன் முழு விவரம் நாளிதழ்களில் வெளியிடப்படும். அழைப்பு வராத விண்ணப்பதாரர்கள் அனைவரும் நிராகரிக்கப்பட்டவர்கள் ஆவர். ஆகவே, அவர்கள் அலைபேசியிலோ, நேரிலோ வந்து தங்களின் விண்ணப்பநிலை குறித்து கேட்கக் கூடாது. வேலைக்கான தகுதியான நபர்களைத் தேர்வு செய்வது மாவட்ட அதிகாரிகளின் இறுதி முடிவிற்கு விடப்படும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் அனைத்துத் துறையிலும் ஆர்.எஸ்.எஸ். சாமியாரின் மதவாத அமைப்பான யுவவாஹினியின் ஆட்கள் நிறைந்துள்ளனர். சாமியார் ஆட்சிக்கு வந்த பிறகு காவல்துறையினருக்கு உதவும் மக்கள் காவலர்கள் என்ற ஒன்று துவங்கப்பட்டது. இதில் ஓட்டுமொத்த பஜ்ரங் தள் மற்றும் இதர விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பினர் நிறைந்துள்ளனர். தற்போது அரசு அலுவலகங்களிலும் நேரடியாக
ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஹிந்துத்துவ நபர்களை சேர்க்கும் பணியை சாமியார் முதலமைச்சர் தன்னுடைய மாவட்டத்தில் இருந்தே துவங்கிவிட்டார்.
இனி இட ஒதுக்கீடும் தேவையில்லை, அதற்கான போராட்டமும் தேவை யில்லை. நேரடியாக அவர்களுக்கு விருப்ப மானவர்களை அனைத்துப் பதவிகளிலும் அமரவைக்கும் அபாயகரமான துவக்கத்தை உத்தரப்பிரதேசத்தில் இருந்து துவக்கி வைத்துள்ளது பா.ஜ.க அரசு.
இது அரசமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமானம் (Basic Structure of the Constitution) என்பதற்கு முற்றிலும் முரணானது அல்லவா?