குமரி, அக். 30- குமரி மாவட்டம் இராசாக்கமங்கலம் தெற்கு ஒன்றிய கழகம் சார்பாக ஒன்றிய கழக செயலாளர் அ. லிவிங்ஸ்டன் தலைமையில், மாவட்ட பிரதிநிதி ராஜேந்திரன் முன்னிலையில் தமிழ் தாய் வாழ்த்தை அவமதித்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை அவர்களை கண்டித்து கன்னியாகுமரி தெங்கம்புதூர் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு கொடும்பாவி எரித்து கண்டனம் தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. மாவட்ட தி.மு.க. வழக்குரைஞர் அணி செயலாளர் குமார் சேரலாதன் கிருஷ்ணன், சொத்த விளைராஜகோபால், வண்டாவிளை ராமசந்திரன், பொட்டல் விலக்கு குஞ்சர் ராஜ், பால் கிணற்றான் விளை சங்கரலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டு ஆளுநருக்கு எதிராக போராடினர்.