குமரி, அக். 30- குமரி மாவட்டம் இராசாக்கமங்கலம் தெற்கு ஒன்றிய கழகம் சார்பாக ஒன்றிய கழக செயலாளர் அ. லிவிங்ஸ்டன் தலைமையில், மாவட்ட பிரதிநிதி ராஜேந்திரன் முன்னிலையில் தமிழ் தாய் வாழ்த்தை அவமதித்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை அவர்களை கண்டித்து கன்னியாகுமரி தெங்கம்புதூர் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு கொடும்பாவி எரித்து கண்டனம் தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. மாவட்ட தி.மு.க. வழக்குரைஞர் அணி செயலாளர் குமார் சேரலாதன் கிருஷ்ணன், சொத்த விளைராஜகோபால், வண்டாவிளை ராமசந்திரன், பொட்டல் விலக்கு குஞ்சர் ராஜ், பால் கிணற்றான் விளை சங்கரலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டு ஆளுநருக்கு எதிராக போராடினர்.
தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த ஆளுநர் ஆர்.என்.இரவி உருவபொம்மை கன்னியாகுமரியில் எரிப்பு
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books