கேரளா வயநாடு இடைத்தோ்தலில் பிரியங்கா போட்டி

1 Min Read

புதுடில்லி, அக்.16 வயநாடு மக்களவைத் தொகுதி இடைத் தோ்தலில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மக்களவைத் தோ்தலில் கேரளத்தின் வயநாடு மற்றும் உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலியில் போட்டியிட்ட ராகுல் காந்தி இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். இதையடுத்து விதிகளின்படி, வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து விலகிய ராகுல், ரேபரேலியைத் தக்கவைத்தார்.

இந்நிலையில், வயநாடு தொகுதியில் நவ. 13-ஆம் தேதி இடைத்தோ்தல் நடை பெறவுள்ளது. இதில் காங்கிரஸ் சார்பில் கட்சியின் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று அதிகாரப்பூா்வ அறிவிப்பை கட்சியின் தேசிய தலைவா் மல்லிகார்ஜுன கார்கே நேற்று (15.10.2024) வெளியிட்டார். இதன்மூலம், தோ்தலில் முதன் முறையாக பிரியங்கா காந்தி களமிறங்கியிருக்கிறார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *