கன்னியாகுமரி, அக்.15 குமரிமாவட்ட திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் நாகர்கோவில், ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் நடைபெற்றது.
திராவிடர்கழக மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி தலைமை தாங்கி உரையாற்றினார். கழக மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம், மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்ட கழகத் துணைத்தலைவர் ச.நல்லபெருமாள் மாவட்ட பகுத்தறிவாளர்கழக தலைவர் உ.சிவதாணு, செயலாளர் பெரியார்தாஸ் மாணவரணி செயலாளர் இரா.கோகுல் ஆகியோர் கருத்துரை ஆற்றினர். மாவட்ட கழக இளைஞரணி செயலாளர் எஸ்.அலெக்சாண்டர் வரவேற்புரையாற்றினார். தோழர்கள் சந்தோஷ், அரிஷ், செல்லையா உள்பட பலர் பங்கேற்றனர்
மறைவுற்ற கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, குமரிமாவட்ட கழகத்தோழர் சி.காப்பித்துரையின் வாழ்விணையர் ஜோஸ்பின் இராஜேஸ்வரி ஆகியோருடைய மறைவுக்கு கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
குமரி மாவட்டத்தில் திராவிடர் கழக இளைஞரணியைப் பலப்படுத்த கடுமையாக உழைப்பது, பொதுக்கூட்டம், தெருமுனைக் கூட்டங்கள், ஒன்றிய கலந்துரையாடல் கூட்டங்கள் நடத்தி, ஒன்றிய கிளைக்கழகங்களில் கழகக் கொடியேற்றுவது இயக்கத்தைப் பலப்படுத்துவது, இயக்க ஏடுகளான ‘விடுதலை’, ‘உண்மை’ இதழ்களுக்குச் சந்தா சேர்ப்பது உள்ளிட்ட சிறப்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட புதிய பொறுப்பாளர்கள் வருமாறு:
எஸ்.அலெக்சாண்டர் மாவட்ட இளைஞரணி தலைவர்,
இரா.இராஜேஷ் இளைஞரணி செயலாளர்,
சந்தோஷ் குமார் இளைஞரணி துணைத்தலைவர்,
அரிஸ் மாநகர இளைஞரணி அமைப்பாளர்.