32,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன காங்கிரஸ் குற்றச்சாட்டு!

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அகமதாபாத், செப். 3- குஜராத்தில் 32,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

குஜராத் பாஜக அரசின் மீது குற்றச்சாட்டு வைத்துள்ள காங்கிரஸ் தலைவர் மனீஷ் தோஷி நிரந்தர ஆசிரியர் நியமனம் செய்வதில் பாஜக அரசு ஏமாற்றி வருவதாகக் கூறி யுள்ளார்.

இது தொடர்பாகப் பேசிய அவர், “ஆசிரியர் பணியிடங்கள் தொடர் பான பொய்யான தகவல்களைக் கூறி அவர்கள் ஏமாற்றி வருகின்றனர். பாஜக கல்வி அமைச்சர் 4,000 ஆசிரியர்களை சமீபத்தில் நியமித்துள்ளதாகக் கூறியதில் உண்மை யில்லை.

குஜராத்தில் 32,000க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் நீண்ட காலமாக காலியாக உள்ளன. இதனால், டெட் – டேட் தேர்வு எழுதிய தகுதி வாய்ந்த விண் ணப்பதாரர்கள் நிரந்தர நியமனங்களுக்காகக் காத்திருக்கிறார்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.

உண்மையில், புதிய நியமனங்கள் என்பது தற்போதுள்ள ஆசிரியர் களை இடமாற்றம் செய் வதே. இதன் மூலம், தகுதி வாய்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு துரோகம் செய்து வரு கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டெட் தேர்வு என்பது 1 முதல் 8 வகுப்பு வரை யிலான ஆசிரியராகக் கட்டாயத் தகுதியாகும். அதேபோல, டேட் தேர்வு 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் களுக்கானத் தேர்வாகும்.

மாணவர் சேர்க்கைக் குறைவாக உள்ளதாகக் காரணமாகக் காட்டி அரசு உதவித் தொகை பெறும் பள்ளிகளை இணைக்கவும் அல்லது மூடவும் அரசு திட்டமிட்டிருப்பதாகவும், இது பழங்குடியின மாணவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் சதி என்றும் விமர்சித்துள்ளார்.

“நாம் ஒரு மோச மான நிலையை அடைந்துள்ளோம். பல பள்ளிகள் ஒரு வகுப் பறையுடன் மட்டுமே செயல்படுகின்றன. இத னால் பல வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் ஒரே வகுப்பில் படிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
மேலும், பாஜகவின் ‘ஞான சஹாயக் யோஜனா’ திட்டம் அரசமைப்புக்கு எதிரானது மற்றும் சட்ட விரோதமானது. மாநிலத்தின் இளை ஞர்களை பொருளாதார ரீதியாக சுரண்டும் நோக்கில் கொண்டு வரப்பட்டது.

நிரந்தர ஆசிரியர்களை நியமிக்கத் தவறியது, பள்ளிகளில் போதிய உள்கட்டமைப்பு வசதி கள் இல்லாமை, 31 சத வீததிற்கு மேலான அரசு பள்ளிகளில் குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலைமையை இந்த அரசு ஏற்படுத்தியுள்ளது” என மனீஷ் தோஷி தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *