வெள்ளத்தில் மிதக்கும் குஜராத்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக உயர்வு : 40,000 பேர் தவிப்பு
அகமதாபாத், ஆக.30 பா.ஜ.க. ஆளும் குஜ ராத்தில் கடந்த 4 நாள்களாக கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் கட்ச், துவாரகா, ஜாம்நகர், மோர்பி, சுரேந்திர நகர், ராஜ்கோட், போர்பந்தர், ஜுனகர், கிர் சோம்நாத், அம்ரேலி, பவ்நகர் மற்றும் பொடாட் உள்ளிட்ட 12 மாவட்டங்க ளில் 50 மி.மீ. முதல் 200 மிமீ வரை கனமழை கொட்டித் தீர்த்தது. இத னால் வதோதராவின் விஸ்வாமித்ரி உள்ளிட்ட பல்வேறு ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில், 12 மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகள் தனித் தீவுகளாக மாறியுள்ளன.
வானிலை அறிக்கையை
அலட்சியப்படுத்திய குஜராத் அரசு
இந்திய வானிலை ஆய்வு மய்யத் தின் முன்னெச்சரிக்கை அறிவிப்பை ஆளும் குஜராத் பாஜக அரசு அலட்சி யப்படுத்தியதால் கன மழை வெள்ளத்தில் சிக்கி 40,000க்கும் அதிகமானோர் உண வின்றி தவித்து வருகின்றனர். தேசியப் பேரிடர் மீட்புப் படையின் (NDRF) 14 குழுக்களும், மாநில பேரிடர் மீட்புப் படையின் (SDRF) 22 குழுக்களும் மற்றும் 6 இராணுவக் குழுக்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், இதுவரை 17,000 பேர் மட்டுமே மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கனமழை காரணமாக வீடு இடிந்தும், தண்ணீரில் மூழ்கியும் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலரைக் காணவில்லை எனவும் தகவல் வெளி யாகியுள்ளது.
கிழக்கு ராஜஸ்தானில் இருந்து சவுராஷ்டிரா பகுதியை நோக்கி நகர்ந்து வரும் ஆழ்ந்த காற்ற ழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக குஜராத்தில் அடுத்த 72 மணிநேரத்தி ற்கு கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மய்யம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் ‘ரெட் அலர்ட்’ அம்மாநில அரசு விடுத்துள்ளது. ஏற்கெனவே குஜராத்தின் 12 மாவட்டங்கள் கனமழை வெள்ளத்தில் விழிபிதுங்கி நிற்கும் நிலையில், மேலும் 72 மணிநேரத்திற்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மய்யம் எச்சரித்துள்ளதால் குஜராத் மாநிலத்தின் நிலைமை மேலும் மோசமாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
கனமழை வெள்ளத்தால் மாநிலத்தின் 50% பகுதிகள் உருக்குலைந்த நிலையில், குஜராத் பாஜக முதலமைச்சர் பூபேந்திர படேல் மீட்பு நடவடிக்கை, உணவின்றி தவிக்கும் மக்கள் நலன் குறித்துப் பேசாமல் பிரதமர் மோடியை புகழ்பாடுவதிலேயே பொழுதைக் கழித்து வருகிறார். நேற்று (29.8.2024) டுவிட்டர் ‘எக்ஸ்’ பக்கத்தில் அவர் கூறுகையில், ‘‘பிரதமர் நரேந்திர மோடி நேற்று (29.8.2024) காலை மீண்டும் ஒருமுறை என்னுடன் தொலைபேசியில் உரையாடி நிலைமையை அறிந்து கொண்டார். வதோதராவில் விஸ்வாமித்ரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கவலை தெரிவித்து, வெள்ளம் பாதித்த பகுதிகளில் சுகாதார நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டுதல்களை வழங்கினார். ஒன்றிய அரசு அனைத்துவிதமான ஆதரவையும் வழங்கும் என்று மீண்டும் உறுதியளித்தார்” என்று தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு நிகழ்ந்த பொழுது ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா,‘‘வயநாட்டில் அதீத கனமழை பெய்யும், நிலச்சரிவு நிகழும், உயிழப்பு ஏற்படும் என இந்திய வானிலை ஆய்வு மய்யம் எச்சரிக்கை விடுத் தது. ஆனால் கேரள அரசு இதனை கண்டு கொள்ளாததால் வயநாட்டில் பேரழிவு ஏற்பட்டது” என இந்திய வானிலை அறிக்கையில் கூறாததைக் கூறி அரசியல் ஆதாயம் பெறும் நோக்கத்தில் நாடாளு மன்றத்தில் பேசினார். ஆனால் தனது சொந்த மாநி லமான குஜராத், வானிலை அறிக்கையை கண்டு கொள்ளாததன் காரணமாக வெள்ளத்தில் மிதக்கி றது. வானிலை அறிக்கையில் தனி நிபுணத்துவம் கொண்டவர் போல பேசும் அமித் ஷா குஜராத் மாநிலத்தின் வெள்ள பாதிப்புகள் குறித்து எதுவும் கூறாதது ஏன்?