வாக்காளர்களின் கவனத்திற்கு அக்டோபர் 29 முதல் நவம்பர் 28 வரை வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள்

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை,ஆக.11- வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கு முன்பாக, வாக்காளர்களின் விவரங்களை வீடு வீடாகச் சேகரிக்கும் பணிகளை வாக்குச்சாவடி அலுவலர்கள் வரும் 20ஆம் தேதி முதல் அக்டோபர் 18ஆம் தேதி வரை மேற்கொள்ள உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி ஒவ்வோர் ஆண்டும் நடைபெறுவது வழக்கம். இந்தப் பணிக்கான கால நிர்ணய அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் வெளி யிட்டுள்ளது. அதன்படி, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் அக்டோபர் 29ஆம் தேதி முதல் நவம்பர் 28ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.
வாக்காளர் பட் டியல் திருத்தப் பணி களுக்கு முன்பாக, வாக்காளர்களின் விவரங்களை வீடு வீடாகச் சேகரிக்கும் பணிகள் தொடங்கவுள்ளன. இந்தப் பணிகளை வாக்குச்சாவடி அலுவலர்கள் வரும் 20ஆம் தேதி முதல் அக்டோபர் 18ஆம் தேதி வரை மேற் கொள்கின்றனர்.

அதைத் தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் அக்டோபர் 19ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடை பெறவுள்ளன. இந்தப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததும், வரைவு வாக்காளர் பட்டியல் பொதுமக்களின் பார்வைக்காக அக்டோ பர் 29ஆம் தேதி வெளி யிடப்பட உள்ளது. அந்தக் காலகட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் போன்ற பணிகளை மேற்கொள்ளலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *