விரைவில் கூட்டுறவு சங்க தேர்தல் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தகவல்

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

காரைக்குடி, மே 5- நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பின் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நடத்தப் படும் என அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
காரைக்குடியில் அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எடப்பாடி பழனிசாமி தலை மையில் செயல்பட்ட அதிமுக அரசு தவணை முறையில் தான் உள்ளாட்சி தேர்தலை நடத்தினர். இதில் 55 சதவீதம் பெற்று அன்று எதிர்க்கட்சியாக இருந்த திமுக வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலை மையிலான அரசு நடத்தப்படாமல் இருந்த 9 மாவட்டங்களுக்கான ஊரகப்பகுதிகளுக்கான தேர்தல், நகராட்சி, பேரூராட்சி, மாநக ராட்சி தேர்தலை நடத்தி ஜனநாய கத்தை நிலைநாட்டியது.

அதுபோல தற்போது கூட்டு றவு சங்கங்களுக்கான பதவிக்காலம் முடிவடைந்துள்ளது. சிறப்பு அலு வலர்கள் மூலம் அந்த பணிகள் நடந்தது வருகிறது.

நாடாளுமன்ற தேர்தல் முடிவு கள் வந்தபிறகு முறையாக தேர்தல் பணிகள் செய்ய கூட்டுறவுத்துறை தயாராக உள்ளது. வாக்காளர் பட்டியல் சரி பார்க்க வேண்டும், உறுப்பினர் சேர்க்கைக்கு வாய்ப்பு தர வேண்டும் என அனைத்தும் பணிகளும் முடிந்து தேர்தல் நடத்தப்படும். இவ்வாறு தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *