ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதற்காக மாணவர்களை ஆசிரியர்கள் அடிப்பது குற்றமில்லையாம்! கேரள நீதிமன்றம் உத்தரவு

1 Min Read

திருவனந்தபுரம், ஆக. 4- ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக, மாணவர்களை ஆசிரியர்கள் அடிப்பது குற்றம் இல்லை எனக் கூறி திருச்சூர் சித்தாட்டுகராவில் உள்ள தனியார் பள்ளி முதல்வர் மற்றும் துணை முதல்வர் மீதான புகாரை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

திருச்சூரில் இயங்கி வரும் தனியார் பள்ளி மாணவர்கள், கடந்த ஜனவரி மாதம் 10ஆம் தேதி வகுப்பு இடைவேளையின் போது, சாப்பிட்டும் பாட்டுப் பாடியும் இருந்துள்ளனர். இந்த செயலுக்காக 5 மாணவர்கள் பள்ளி தலைமையாசிரியர் அறைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், அவர்களை கன்னத்தில் அடித்ததாக பாவராட்டி காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த புகாரை ரத்து செய்யக்கோரி பள்ளி தலைமையா சிரியரும், துணை முதல்வரும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி ஏ.பதருத் முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மருத்துவ பரிசோதனையில் மாணவர்களுக்கு உட்புற மற்றும் வெளிப்புற காயங்கள் எதுவும் காணப் படவில்லை எனக்கூறி வழக்கை ரத்து செய்தது. மேலும், பள்ளியில் ஒழுக்கத்தை நிலைநாட்டுவதற்காக மாணவர்களை அடித்தாலும், அதை கடுமையான குற்றமாக கருத முடியாது எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *