கொழுப்பை அதிகரிக்கும் பிளாஸ்டிக்!

1 Min Read

அரசியல்

உலகில் தற்போது பிளாஸ்டிக் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. அதே நேரம், பெரும்பாலான நாடுகளில் உடல் பருமன் ஒரு சவாலான போக்காக மாறியுள்ளது. இந்த இரண்டுக்கும் தொடர்பு இருக்கலாம் என்கின்றனர், நார்வே அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானிகள்.

நாம் உணவு மற்றும் நீரைக் கையாளப் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கலன்களில் உள்ள சில வேதிப் பொருட்கள், உடலில் புகுந்து உணவை செரிமானிக்கும் முறையில் இடையூறுகளை ஏற்படுத்துவதாக நார்வே விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இதனால், மனித உடலில் கொழுப்பு செல்கள் அபரிமிதமாகப் பெருகி வளர்வதையும் விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர். தயிர் வைக்கும் பிளாஸ்டிக் பாத்திரம், சமையலறையில் சுத்தம் செய்ய உதவும் 

ஸ்பாஞ்ச், குடிநீர் பாட்டில்கள் போன்ற அன்றாடம் பயன்படும் 34 விதமான பிளாஸ்டிக் பொருட்களில் உள்ள வேதிப் பொருட்களை அடையாளம் கண்டனர்.

அவற்றில் 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேதிப் பொருட்கள் இருப்பதையும், அதில் 629 வகைகளை, ஆபத்து விளைவிக்கக் கூடியவை என்று பிரித்தனர். இதிலும் 11 வேதிப் பொருட்கள் மனித செரிமான அமைப்பில் இடையூறு செய்ய வல்லவை என்று தெரிய வந்தது. எனவேதான், பிளாஸ்டிக் கலன்களை உணவு மற்றும் குடிநீருக்குப் பயன்படுத்துவதை அறவே தவிர்ப்பது, உடல் பருமனை குறைக்க உதவக்கூடும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *