இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி மறைவு – கழகத் தலைவர் ஆசிரியர் இரங்கல்

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

அரசியல்

இஸ்ரோவின் ராக்கெட் ஏவப்படும் நிகழ்வுகளுக்கு நேரடி வர்ணனை செய்து வந்த தலைசிறந்த வர்ண னையாளர் என்ற பெருமை பெற்றவரும், 1984இல் இஸ்ரோ நிறுவனத்தில் பணி யில் சேர்ந்து 2011ஆம் ஆண் டில் ஜீ-சாட் 12 பணியின் திட்ட இயக்குநராக உயர்ந்து பல பொறுப்புகளில் முத்திரை பதித்தவருமான திருமதி வளர்மதி அவர்கள் தனது 54ஆம் வயதில் நேற்று (4.9.2023) மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி அதிர்ச்சி தரும் செய்தியாகும்.

அவர் அரியலூரில் தமிழ் வழியில் படித்து முன்னேறியவர்.

அவரது மறைவு அவர் குடும்பத்திற்கும், இஸ்ரோ அறிவியல் குடும்பத்திற்கும் மட்டும் இழப்பல்ல; அறிவியல் துறைக்கும், விண்ணியல் ஆய்வுத் துறைக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

அவரது மறைவுக்கு நமது ஆழ்ந்த இரங்கலும், குடும்பத்தாருக்கு ஆறுதலும் உரித்தாகுக.

ஆசிரியர்  கி.வீரமணி

தலைவர், 

திராவிடர் கழகம்

சென்னை

5.9.2023

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *