
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் சகோதரர் கடலூர் கி.தண்டபாணி அவர்களின் பேரன் அரவிந்த் முருகன், தேவ கிருபா ஆகியோரின் MAG resource revolution private limited நிறுவன அலுவலகத்தை கடலூர் செல்லங்குப்பம் கோவிந்தசாமி நகரில் இன்று (29.8.2026) காலை 11 மணிக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் திறந்து வைத்தார். MAG EEE (AITUAR) – அதன் ஒரு பகுதியை புதுச்சேரி பாகூர் சட்டமன்ற உறுப்பினர் பி.செந்தில்குமார் தொடங்கி வைத்தார். நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தேவ கிருபா, இயக்குநர்கள் அரவிந்த் முருகன், பெரியசாமி மற்றும் குடும்பத்தினர் முருகன் சாந்தினி, செல்வமணி, தேசிங்கு ராஜன், பெரியார் செல்வம் , ஜெயபாலன், தேன்மொழி, சந்துருகுமார், பெரியசாமி, சதீஷ், யுவராஜ், வார்டு உறுப்பினர் சரத் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர். கழகப் பொதுச் செயலாளர்கள் வீ. அன்புராஜ், முனைவர் துரை. சந்திரசேகரன், கடலூர் மாவட்ட தலைவர் தண்டபாணி, மாவட்ட காப்பாளர் ஆர்.பி.எஸ். பன்னீர்செல்வம், மாவட்ட செயலாளர் எழிலேந்தி தென் சிவகுமார், புதுச்சேரி மாநில தலைவர் சிவ.வீரமணி, இள.புகழேந்தி, பண்ருட்டி கோ.புத்தன், டிஜிட்டல் ராமநாதன் மற்றும் தோழர்கள் பங்கேற்றனர்.
