மும்பை, மே 19 இந்தியா கூட்டணி யின் தலைவர்கள், காங்கிரஸ் தலை வர் மல்லிகார்ஜுன கார்கே, தேசிய வாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) தலைவர் சரத் பவார், உத்தவ் தாக் கரே ஆகியோர் மும்பையில் நேற்று (18.5.2024) செய்தியாளர்களுக்குக் கூட்டாக பேட்டியளித்தனர்.
அப்போது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி எங்கு சென்றாலும் மக்களிடையே பிரிவினையைத் தூண்டும் வகையில் பேசுகிறார். காங்கிரஸ், சமாஜ் வாதி ஆட்சிக்கு வந்தால் அயோத்தி ராமர் கோயிலை புல்டோசர் மூலம் இடிப் பார்கள் என்று அபாண்டமாக குற்றம்சாட்டுகிறார். நாங்கள் இது வரை புல்டோசர்களை பயன்படுத்தி யது கிடையாது.
பிரதமர் மோடியின் கருத்துகள் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒன்றியத்தில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால், அர சமைப்புச் சட்டத்தின் அடிப்படை யில் செயல்படுவோம்.
மகாராட்டிராவில் துரோகத்தின் ஆட்சி நடைபெறுகிறது. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கொடிகள், சின்னங்கள் வலுக்கட்டாயமாக பறிக்கப்பட்டு போலி அணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஒன்றியத்திலும் மகாராட்டிராவிலும் ஆளும் பாஜக அரசுகள் சர்வாதிகாரப் போக்குடன் செயல்படுகின்றன.
தற்போதைய மக்களவைத் தேர் தலில் மகாராட்டிராவின் 48 தொகுதி களில் 46 இல் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். டில்லி உள்ளிட்ட 3 மாநிலங்களில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகி றோம். பஞ்சாபில் மட்டும் எதிரெதிர் அணியில் போட்டியிடுகிறோம். இது ஜனநாயக ரீதியிலான போட்டி. நாங் கள் சர்வாதிகாரத்தில் ஈடுபட வில்லை.
பாஜகவை தோற்கடிக்க அனைத்து வகையிலும் வியூகம் வகுத்து செயல்படுவோம். மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா இந்தியா கூட்டணியில் நீடிக்கிறார். கூட்டணி குறித்து ஆதிர் ரஞ்சன் சவுத்ரி முடிவு எடுக்க முடியாது. காங்கிரஸ் தலை மையே முடிவு எடுக்கும். தலைமை யின் முடிவுக்கு கட்டுப்படாதவர்கள் வெளியேற்றப்படுவார்கள்.
இவ்வாறு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.