புதுடில்லி, மே 16- உணவு, இருக்கை தவிர ரயில் பயணச் சீட்டு மூலம் பல்வேறு சேவைகளை பெற முடியும் ரயில் பயணச் சீட்டுகளை வைத்து தங்கும் இடம் முதல், மருத்துவ வசதி வரை அனைத்தையும் பெற்றுக்கொள்ள முடியும்.
என்ன என்ன வசதிகள்
1. உங்களிடம் உறுதி செய்யப்பட்ட ரயில் பயணச் சீட்டு இருந்தால் ஒருவேளை உங்களுக்கு தங்குமிடம் தேவைப்பட்டால், நீங்கள் மிஸிசிஜிசி-ன் தங்குமிடத்தை பயன்படுத்தலாம். வெறும் ரூ.150-க்கு உங்களுக்கு படுக்கை கிடைக்கும். இது 24 மணி நேரம் மட்டுமே செல்லுபடியாகும்.
2. இந்திய ரயில்வேயில், தலையணை, படுக்கை விரிப்பு மற்றும் போர்வை அனைத்தும் ஏசி 1, 2 மற்றும் 3இல் இலவசமாகக் கிடைக்கும். இந்த வசதிகள் அனைத்தும் ரயில் நிலையங்களிலும் இலவசமாகக் கிடைக்கும். ஏசியில் இந்த விடயங்கள் கிடைக்கவில்லை என்றால், உங்கள் ரயில் பயணச் சீட்டைக் காட்டி இவற்றை பெற்றுக்கொள்ளலாம். அதற்கு கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது.
3. ரயிலில் பயணம் செய்யும்போது உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால், ஸிறிதி-க்கு தகவல் தெரிவிக்கலாம். நீங்கள் விரும்பினால் 139அய் அழைக்கலாம். இதன் மூலம் உங்களுக்கு உடனடியாக முதலுதவி கிடைக்கும். அப்படி ரயிலில் தேவையான வசதிகள் இல்லையென்றால் அடுத்த ரயில் நிலையத்தில் வசதிகள் செய்து தரப்படும்.
4. அனைத்து ரயில் நிலையங்களிலும் ‘லாக்கர்’ அறை மற்றும் க்ளோக் ரூம் உள்ளது. இங்கு உங்கள் உடமைகளை சுமார் 1 மாதம் வரை வைத்திருக்க அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் இதற்கு ஒரு நாளைக்கு ரூ.50 முதல் ரூ.100 வரை கட்டணம் செலுத்த வேண்டும்.
5. நீங்கள் ராஜ்தானி, துரந்தோ அல்லது சதாப்தி போன்ற பிரீமியம் ரயிலில் பயணச் சீட்டு முன்பதிவு செய்திருந்தால், இந்த ரயில்கள் 2 மணி நேரத்திற்கும் மேலாக தாமதமானால், உங்களுக்கு மிஸிசிஜிசி கேன்டீனில் இருந்து இலவச உணவும் வழங்கப்படும். அவ்வாறு உணவு வழங்கப்படாவிட்டால், 139 என்ற எண்ணுக்கு புகார் செய்யலாம். புகார் அளிப்பது எப்படி? :
உங்களிடம் உறுதிசெய்யப்பட்ட பயணச் சீட்டு இருப் பினும், இந்த வசதிகளில் நீங்கள் ஏதேனும் சிக்கலை எதிர்கொண்டாலோ அல்லது இவற்றின் பலனை உங்களால் பெற முடியாவிட்டாலோ, 139 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.
ரயில் பயணச் சீட்டில் இத்தனை சேவைகளா? – அறிந்து கொள்வீர்!
Leave a Comment