இட ஒதுக்கீட்டை ஒழிக்க பிஜேபி மும்முரம் மத்தியப் பிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி நேரடி குற்றச்சாட்டு

2 Min Read

போபால், மே 2- நேரடியாகவும் மறைமுகமாகவும் இடஒதுக்கீட்டை ஒழிக்க பாஜக முயற்சி செய்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.
மத்தியப் பிரதேசத் தின் பிண்ட் நகரில் நேற்று (1.5.2024) காங்கி ரஸ் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசியதா வது: இந்திய அரசமைப்பு சாசனம் என்பது வெறும் புத்தகம் கிடையாது. விவசாயிகள், ஏழைகள், தொழிலாளர்கள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடி, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உரிமைகளை அளிக்கும் சாசனம் ஆகும். அம்பேத்கர் உருவாக்கிய அரசமைப்பு சாசனம் இந் திய மக்களின் ஆன்மா வாக விளங்குகிறது.

தற்போதைய மக்கள வைத் தேர்தலில் எப்படி யாவது ஆட்சியைப் பிடித்து அரசமைப்பு சாசனத்தை அழிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி, அமைச் சர் அமித் ஷா மற்றும் பாஜக தலைவர்கள் விரும்புகின்றனர்.
காங்கிரஸும் இண் டியா கூட்டணி கட்சிக ளும் அரசமைப்பு சாச னத்தை காப்பாற்ற முயற்சி செய்கிறோம். இரு அணிகளில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

சுமார் 25 தொழிலதி பர்கள் மூலம் ஒட்டு மொத்த நாட்டையும் ஆட்சி செய்ய பாஜக விரும்புகிறது. தொழிலதி பர்களின் ரூ.16 லட்சம் கோடி கடன்களை ஒன் றிய அரசு தள்ளுபடி செய்துள்ளது. ஆனால் விவசாயிகள், தொழிலா ளர்களின் கடன்களை தள்ளுபடி செய்ய ஒன்றிய அரசு மறுக்கிறது.
ராணுவத்தில் அக்னி பாதை திட்டத்தை அமல் படுத்தியதால் ஏராள மான இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறி போய் உள்ளது. ரயில்வே உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்கள் தனி யார் மயமாக்கப்பட்டு வருகின்றன. நேரடியா கவும் மறைமுகமாகவும் இடஒதுக்கீட்டை ஒழிக்க பாஜக தீவிர முயற்சி செய்கிறது.
பணமதிப்பிழப்பு, தவ றான முறையில் ஜிஎஸ்டி வரியை அமல் படுத்தியது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த 45 ஆண்டுகளில் இல் லாத வகையில் வேலை வாய்ப்பின்மை அதிக ரித்து உள்ளது. பணவீக்க மும் கணிசமாக உயர்ந் திருக்கிறது. ஒன்றியத்தில் இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஒன் றிய அரசு பணிகளில் 30 லட்சம் இடங்கள் நிரப் பப்படும். நாடு முழுவதும் வேலைவாய்ப் புகளை அதிகரிக்க நடவ டிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *