போபால், மே 2- நேரடியாகவும் மறைமுகமாகவும் இடஒதுக்கீட்டை ஒழிக்க பாஜக முயற்சி செய்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.
மத்தியப் பிரதேசத் தின் பிண்ட் நகரில் நேற்று (1.5.2024) காங்கி ரஸ் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசியதா வது: இந்திய அரசமைப்பு சாசனம் என்பது வெறும் புத்தகம் கிடையாது. விவசாயிகள், ஏழைகள், தொழிலாளர்கள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடி, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உரிமைகளை அளிக்கும் சாசனம் ஆகும். அம்பேத்கர் உருவாக்கிய அரசமைப்பு சாசனம் இந் திய மக்களின் ஆன்மா வாக விளங்குகிறது.
தற்போதைய மக்கள வைத் தேர்தலில் எப்படி யாவது ஆட்சியைப் பிடித்து அரசமைப்பு சாசனத்தை அழிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி, அமைச் சர் அமித் ஷா மற்றும் பாஜக தலைவர்கள் விரும்புகின்றனர்.
காங்கிரஸும் இண் டியா கூட்டணி கட்சிக ளும் அரசமைப்பு சாச னத்தை காப்பாற்ற முயற்சி செய்கிறோம். இரு அணிகளில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
சுமார் 25 தொழிலதி பர்கள் மூலம் ஒட்டு மொத்த நாட்டையும் ஆட்சி செய்ய பாஜக விரும்புகிறது. தொழிலதி பர்களின் ரூ.16 லட்சம் கோடி கடன்களை ஒன் றிய அரசு தள்ளுபடி செய்துள்ளது. ஆனால் விவசாயிகள், தொழிலா ளர்களின் கடன்களை தள்ளுபடி செய்ய ஒன்றிய அரசு மறுக்கிறது.
ராணுவத்தில் அக்னி பாதை திட்டத்தை அமல் படுத்தியதால் ஏராள மான இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறி போய் உள்ளது. ரயில்வே உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்கள் தனி யார் மயமாக்கப்பட்டு வருகின்றன. நேரடியா கவும் மறைமுகமாகவும் இடஒதுக்கீட்டை ஒழிக்க பாஜக தீவிர முயற்சி செய்கிறது.
பணமதிப்பிழப்பு, தவ றான முறையில் ஜிஎஸ்டி வரியை அமல் படுத்தியது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த 45 ஆண்டுகளில் இல் லாத வகையில் வேலை வாய்ப்பின்மை அதிக ரித்து உள்ளது. பணவீக்க மும் கணிசமாக உயர்ந் திருக்கிறது. ஒன்றியத்தில் இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஒன் றிய அரசு பணிகளில் 30 லட்சம் இடங்கள் நிரப் பப்படும். நாடு முழுவதும் வேலைவாய்ப் புகளை அதிகரிக்க நடவ டிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.