டில்லி ஆளுநர் கேரளா கிறிஸ்தவ மத போதகரை சந்தித்த பின்னணி என்ன?

1 Min Read

புதுடில்லி, ஏப்.27- டில்லி ஆளுநர் வி.கே.சக் சேனா 2 நாள் பயணமாக கேரளா சென்ற நிலையில், அங்கு கிறிஸ்தவ மத தலைவர்கள் (பிஷப்) சிலரை சந்தித்ததாகத் தெரிகிறது. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிஷப்புகளை ஆளுநர் சந்தித்தது தேர்தல் விதிமீறல் என பலரும் கூறியுள்ளனர்.
எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரள சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த நிர்வாகியுமான வி.டி.சதீசன் தேர்தல் ஆணையத்திற்குக் கடிதம் எழுதியுள்ளார். “ஆளுநர் அரசமைப் புச் சட்டத்துக்கு உட்பட்ட வர் என்பதால் அவர் எந்த அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது. இதனை மீறியதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் கடிதத்தில் கோரியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *