ஏப்ரல் 23 – ராஜகிரி கோ.தங்கராசு நூற்றாண்டு பிறந்தநாள் தஞ்சையில் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

1 Min Read

சுயமரியாதைச் சுடரொளி இராஜகிரி கோ. தங்கராசு அவர்களின் 100 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இன்று (23.4.2024) காலை 10 மணி அளவில் தஞ்சாவூர் கீழராஜவீதி பெரியார் இல்லத்தில் ராஜகிரி கோ.தங்கராசு அவர்களின் படத்திற்கு திராவிடர் கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன், காப்பாளர் மு.அய்யனார், கிராம பிரச்சார குழு மாநில அமைப்பாளர் அதிரடி.அன்பழகன், தஞ்சை மாநகர தலைவர் பா.நரேந்திரன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றிகுமார், மாநகரச்செயலாளர் அ.டேவிட், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் அ.இராமலிங்கம், தஞ்சை வடக்கு ஒன்றிய செயலாளர் காசி. அரங்கராசன், கரந்தை பகுதி தலைவர் வெ.விஜயன், கரந்தை பகுதி செயலாளர் ம.தனபாலன், மா.திராவிடசெல்வன், விசிறி சாமியார் முருகன், அடிகளார் இராஜகிரி தங்கராசு,அவர்களின் மூத்த மகன் த.பாண்டியன் உள்ளிட்ட கழகத் தோழர்கள் மற்றும் குடும்ப விளக்கு நிறுவன ஊழியர் அசோக்குமார் ஆகியோர் இராஜகிரி கோ.தங்கராசு அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *