வீடுகளில் வீணாகும் உணவுகள் 100 கோடி மக்களின் பசியை தீர்க்கும் : அய்.நா. அறிக்கை வெளியீடு

viduthalai
1 Min Read

புதுடில்லி, ஏப். 1- உலகளாவிய உணவு விரயம் தொடர்பான அறிக்கையை அய்.நா. வெளியிட்டுள்ளது. 2022ஆம் ஆண்டில் 5இல் 1 பங்கு அளவில் உணவு விரயமானதாக அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.
வீடுகளில் 63 கோடி டன், உணவகங்களில் 29 கோடி டன், சில்லறை கடைகளில் 13 கோடி டன் என உலக அளவில் 105 கோடி டன் உணவு விரயம் செய்யப்படுகிறது. வீடுகளில் ஒரு நாளைக்கு 100 கோடி டன் உணவுகள் வீணாக்கப்படுகின்றன என்று அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.
இதன்படி, உலக அள வில் வீடுகளில் ஒரு நாள் வீணாகும் உணவைக் கொண்டு 100 கோடி மக்களின் பசியைத் தீர்க்க முடியும். குறிப்பாக, அதிக வெப்ப நிலை நிலவும் நாடுகளில் உள்ள வீடு களில் தனிநபர் உணவு விரயம் அதிகமாக உள் ளது. அதிக வெப்ப நிலை யால், உணவை சேமித்து வைப்பது அங்கு சவாலாக உள்ளதால் விரயம் அதி கம் நிகழ்வதாக குறிப்பி டப்பட்டுள்ளது.
இது குறித்து அய்.நா.வின் சுற்றுச்சூழல் திட்டப் பிரிவின் செயல் இயக்குநர் ஆண்டர்சன் கூறுகையில், “உணவு விரயம் என்பது உலக அளவில் நிகழ்ந்து வரும் துயரமான நிகழ்வு லட் சக்கணக்கான மக்கள் உணவின்றிபசியில் வாடும் சூழலில், உணவு கள் எந்தக் கணக்குமின்றி வீணாக்கப்படுகின்றன.
சுற்றுச்சூழல் சார்ந் தும் இது பாதிப்பை ஏற் படுத்துகிறது. இதில் ஆறு தலான விஷயம், நாடுகள் நினைத்தால் உணவு விரயத்தை கட்டுப்படுத்த முடியும்.
எனவே, உலக நாடுகள் உணவு விரயத்தை கட்டுப்படுத்த இலக்கு நிர்ணயித்து செயல்பட வேண்டியது அவசியம்” என்று தெரிவித்து உள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *