பீகாரில் காங்கிரஸ் -ஆர்.ஜே.டி தொகுதிகள் பங்கீடு

1 Min Read

பாட்னா,மார்ச் 31- பீகார் மாநிலத்தில் அய்க்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார், பாஜக.வுடன் மீண்டும் இணைந்து முதலமைச்சரானார். இந்நிலையில், லாலு பிரசாத்தின் ராஷ் டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ் உள்பட சில கட்சிகள் ‘மகாபந்தன்’ கூட்டணியில் உள்ளன. இந்த கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து 29.3.2024 அன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதன்படி, ஆர்ஜேடிகட்சி 26 தொகுதிகளிலும், காங்கிரஸ் 9 இடங்களிலும் போட்டியிடுகின்றன.

தவிர சிபிஅய் (எம்எல்) 3 தொகுதிகள், சிபிஅய் மற்றும் சிபிஅய் (எம்) ஆகிய கட்சிகள் தலா ஒரு தொகுதிகளில் போட்டியிடுகின்றன. தொகுதிப் பங்கீடு அறிவிப்பு நிகழ்ச்சியில் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி பங்கேற்பதாக இருந்தது. ஆனால், அவர் பங்கேற்கவில்லை. பீகாரில் மிகவும் பிரபலமான பப்பு, தனது ஜன் அதிகார் கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்தார்.
அதன்மூலம் இந்த மக்களவைத் தேர்தலில் ஒரு தொகுதியை ஒதுக்குவதாக காங்கிரஸ் தலைவர்கள் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி இருவரும், பப்பு யாதவுக்கு வாக்குறுதி அளித்துள்ளனர்.
பப்பு யாதவின் மனைவி ரஞ்ஜீத் ரஞ்சன் தற்போது மாநிலங் களவை உறுப்பினராக இருக்கிறார். இந்நிலையில், புர்னியா தொகுதியை பப்பு யாதவ் கேட்டிருந்தார். ஆனால், அந்த தொகுதியில் போட்டியிட ஆர்ஜேடி.யும் ஆர்வமாக இருந்தது. எனவே புர்னியா தொகுதியை காங்கிரஸ் விட்டுக் கொடுத்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *