பழங்குடியினர் வாழ்க்கை மேம்பட காங்கிரஸ் உதவிக் கரம் நீட்டும் நடைப்பயணத்தில் ராகுல் காந்தி உறுதி

viduthalai
1 Min Read

தான்பாத்,பிப்.5- காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல்காந்தி, கடந்த மாதம் 14-ஆம் தேதி மணிப் பூரில் பாரத ஒற்றுமை நீதி பய ணத்தை தொடங்கினார். 3.2.2024 அன்று ஜார்கண்ட் மாநிலம் தான்பாத் மாவட்டம் துன்டியில் நடைப் பயணம் முடிவடைந்தது. இரவு ஓய்வுக்கு பிறகு, 4.2.2024 அன்று தான்பாத் நகரின் கோவிந்த் பூரில் நடைப் பயணம் தொடங்கி யது. அங்கு சாலை பேரணியாக அவர் சென்றார். சாலையின் இரு புறமும் ஏராளமானோர் திரண்டு நின்று அவருக்கு வரவேற்பு அளித் தனர்.
சாலை பேரணியில் பேசிய ராகுல்காந்தி, பொதுத்துறை நிறுவ னங்களை தனியாருக்கு விற்பதை தடுப்பதுதான் நான் நடைப் பய ணம் நடத்துவதன் முக்கிய நோக் கம், இளைஞர்களுக்கும், பழங்குடியினருக்கும் நீதியை உறுதி செய்வதே ஆகும். பழங்குடி மக்களின் தண்ணீர், வனம், நிலம் ஆகியவற்றை காங் கிரஸ் பாதுகாக்கும். இளைஞர் களின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கு பாடுபடும். பொருளா தார ஏற்றத்தாழ்வு, பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., வேலையின்மை ஆகி யவை நாட்டின் இளைஞர்களது எதிர்காலத்தை சீரழித்து விட்டன என்று அவர் பேசினார்.
பின்னர், பொகாரோ மாவட் டம் வழியாக, ராம்கார் மாவட் டத்தில் நடைப் பயணம் முடிவ டைந்தது. ஜார்கண்ட் மாநிலத்தில் இரு கட்டங்களாக 8 நாட்கள் நடைப் பயணம் நடைபெறும். 13 மாவட்டங்கள் வழியாக 804 கி.மீ. தூரம் பயணம் செய்யும் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *