தெலங்கான நாத்திக சங்கத்தினரின் இசைப் பாடலுடன் பெரவள்ளூரில் பெரியார் 148 ஆம் பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டம்!

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, செப்.20 வடசென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், பெரம்பூர் – அகரம் – பெரவள்ளூர் சதுக்கத்தில் கடந்த 17.9.2026 அன்று மாலை 6 மணிக்கு, “உலகத் தலைவர் தந்தை பெரியாரின் 148 ஆம் பிறந்தநாள் விழா நடைபெற்றது. பெரியார் பெருந்தொண்டரும், வடசென்னை மாவட்ட கழக மகளிரணி மேனாள் தலைவருமான கு.தங்கமணி குணசீலன் நினைவாக அம்மேடை அமைக்கப்பட்டி ருந்தது.

நிகழ்வில், வடசென்னை மாவட்டச் செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன் அனைவரையும் வரவேற்றும், ஏன் பெரியார் பிறந்தநாள் கொண்டாட வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டி உரையாற்றினார்.

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து உரையாற்றிய, மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டி யன், நிகழ்ச்சியை நெறிப்படுத்தியும் சிறப்பித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் தொடங்கி வைத்தும், மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம், திராவிடர் மகளிர் பாசறை மாநிலச் செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, வழக்குரைஞரணி மாநில துணைச் செயலாளர் வழக்குரைஞர் துரை. அருண், துணைப்பொதுச்செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, பொருளாளர் வீ.குமரேசன், துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆகியோர் முன்னிலை வகித்தும் உரையாற்றினர்.

துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில இளைஞரணி இணைச் செயலாளர் சோ.சுரேஷ், மாநில மகளிரணி துணைச் செயலாளர் க.இறைவி, மாநில மகளிரணி துணைச் செயலாளர் வீ.கே.ஆர்.பெரியார் செல்வி, தலைமை செயற்குழு உறுப்பினர் தே.செ.கோபால், பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன், சி.வெற்றிச்செல்வி, பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் செ.பெ.தொண்டறம், முனைவர் அதிரடி க.அன்பழகன், முனைவர் த.கு.திவாகரன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், சு.மோகன்ராஜ், தென்சென்னை மேற்கு மாவட்டத் தலைவர் கரு.அண்ணாமலை, ஆவடி மாவட்டத் தலைவர் வெ.கார்வேந்தன், செயலாளர் க.இளவரசன், கும்மிடிப்பூண்டி மாவட்டத் தலைவர் புழல் க.ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர்.

தந்தை பெரியார்பற்றிய கொள்கைப் பாடல்கள்!

முன்னதாக, தெலங்கான நாத்திக சங்கத்தின் நிறுவனர் ஜி.டி.சாரய்யாவின் தலைமையில் பாலாஜி, ராமகிருஷ்ணன், சிறீதர், ஸ்பார்ட்டகஸ், ராஜ்குமார், ஆனந்த் மற்றும் போஸ் பாபு ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு, தெலுங்கில், தாளத்துடன் மூன்று பாடல்களைப் பாடினர். ஒன்று, பெரியார் கொள்கை எப்படிப்பட்டது என்றும், மற்றொன்று, பார்ப்பன ஆதிக்கம் எப்படிப்பட்டது என்றும், மூன்றாவது, பெரியார் அதை எப்படியெல்லாம் தகர்த்தார் என்றும் அப்பாடல்கள் அமைந்திருந்தது. கலந்து கொண்ட அனைவரும் மிகுந்த ஈடுபாட்டுடனும், உணர்ச்சி யுடனும் பாடல்களைப் பாடினர். இந்நிகழ்வில் கலந்து கொண்டு பாடிய ஸ்பார்ட்டகஸ், ஆங்கிலத்தில் மூன்று பாடல்களின் கருத்தை சுருக்கமாக விவரித்தார். மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன் அதைத் தமிழில் பெயர்த்துக்கூறினார்.

இயக்க நூல்கள் அறிமுகம்!

தொடர்ந்து, ‘‘பெரியார் கேட்கும் கேள்விகள்” 10 புத்தகங்கள் ரூ.200/- க்கும், ”உலகத்தலைவர் தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு” 12 தொகுதிகள் ரூ.3,000/- க்கும், ”விடுதலை மலர்” ரூ.300–க்கும் அறி முகம் செய்யப்பட்டன. தோழர்கள் வரிசையாக வந்து கழகத் தலைவரிடம் புத்தகங்களை பெற்றுச் சென்றனர்.

‘‘பெரியார் உலக”த்திற்கு
நன்கொடை!

பெரியார் பெருந்தொண்டர் முத்துக்கிருஷ்ணன், ‘‘பெரியார் உலகம்” நன்கொடை ரூ.30,000/-, விடுதலை சந்தா ரூ.2,000/-, ‘‘சாமி கைவல்யம் முதியோர் இல்லம்” நன்கொடையாக ரூ.2,000/-, அன்னை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2,000/- என மொத்தம் ரூ.36,000/- காசோலையாக, ஆவடி மாவட்டச் செயலாளர் க.இளவரசன் உடனிருக்க, கழகத் தலைவரிடம் வழங்கினார். அண்மையில் மணவிழா கண்ட வடசென்னை மாவட்ட அமைப்பாளர் ஓட்டேரி சி.பாஸ்கர் மகள் இளையமதி – சதீஷ் இணை யர்கள் ”பெரியார் உலகம்” நிதியாக ரூ.15,000/- வழங்கினர்.  பெரம்பூர் – செம்பியம் திராவிடர் கழகம் சார்பில், மாவட்டக் காப்பாளர் கி.இராமலிங்கம், கழகத் தலைவருக்குப் பயனாடை அணிவித்து, பெரியார் உலக நிதிக்கு ரூ.1000 வழங்கினார். கழகத்தின் இளைஞரணி சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்குப் பயனாடை அணிவித்து, மரியாதை செய்யப்பட்டது. சுயமரியாதைத் திருமண நிலையத்தின் இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி கழகத்தலைவருக்கு பயனாடை அணிவித்து மரியாதை செய்தார்.

மேலும், “பெரியார் எனும் வியப்பு” எனும் நூலை நூலாசிரியர் மோகன் மேடையில் அமர்ந்திருந்த வர்களுக்கு வழங்கி மகிழ்ந்தார். நிறைவாக கழகத் தலைவர் உரையாற்றினார்.

வடசென்னை மாவட்டக் காப்பாளர் கி.இராமலிங்கம் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

முன்னதாக, கூட்ட செலவில் துண்டு விழுந்துள்ளது என்று, தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், தோழர்கள் பொதுமக்களிடம் துண்டேந்தி வருவார்கள் என்று அறிவிப்பு செய்திருந்தார். அதன்படி தோழர்கள் பசும்பொன்னும், த.மரகதமணியும் துண்டேந்திச் சென்றனர். குறைந்த நேரத்தில் மக்கள், ரூ.3,200/- ரூபாயை கூட்ட செலவுக்காக வழங்கியிருந்தனர். அத்தொகை மேடையில் அறிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மரகதமணியுடன் பா.பார்த்திபன், ந.கார்த்திக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தோழர்கள் பெரியார் மாணாக்கன், பூவை செல்வி, ஆவடி முருகேசன், பெரியார் சமூகக் காப்பு அணி பயிற்றுநர் காமராஜ், இளைஞரணித் தோழர்கள் பூவரசன், யுகேஷ், ஊடவிலயாளர் த.பரிதின், ஆவடி ஆ.வெ.நடராஜன், இ.தமிழ்மணி, பொதுக்குழு உறுப்பினர் தி.செ.கணேசன், செம்பியம் கழக செயலாளர் டி.ஜி.அரசு, மாவட்ட துணைச் செயலாளர் வ.தமிழ்ச்செல்வன், திராவிட மாணவர் கழகச் செயலாளர் அ.புகழேந்தி, மகளிரணிச் செயலாளர் த.இளவரசி, மாவட்ட தொழிலாளர் கழகத் தோழர் க.சுமதி, அயன்புரம் துரைராஜ், செந்துறை இராசேந்திரன், சி.வாசு, பெரியார் பெருந்தொண்டர்கள் கோ.தங்கமணி, தங்க. தனலட்சுமி, அரும்பாக்கம் சா.தாமோதரன், கோவை சகா உள்ளிட்டோரும், பொதுமக்கள் ஏராளமானோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். கலந்துகொண்ட அனைவருக்கும் தந்தை பெரியார் 148 ஆம் பிறந்த நாளை முன்னிட்டு இனிப்பு வழங்கப்பட்டது.

கடைசி வரையிலும் மக்கள் கலையாமல் இருந்து கருத்துகளை உள்வாங்கிக்கொண்டனர். மொத்தத்தில் இந்நிகழ்வு திராவிடர் இயக்கத்தின் மாலை நேரக் கல்லூரியாக இருந்து மக்களுக்கு பெரியாரின் அவசியம் பற்றி மறுபடியும் கற்றுத் தந்ததாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *