பெங்களூருவின் 50% கழிவு நீர் காவிரியில் கலக்கிறது கருநாடக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராமலிங்கம் ஒப்புதல்

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

பெங்களூரு, செப்.13- பெங்களூரு மாநகரின் 50 சதவீத கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யப்படாமல், காவிரி, தென்பெண்ணை ஆகிய ஆறுகளில் கலந்து தமிழ்நாடு செல்வதாக கர்நாடக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராமலிங்கம் (ரெட்டி) தெரி வித்தார்.

கருநாடக மாநிலம் பெங்களூரு மாநகரின் கழிவு நீர் காவிரி, தென்பெண்ணை ஆகிய ஆறுகளில் கலப்பதாக, தமிழக அரசு பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து. இந்த வழக்கு, அடுத்த வாரம் விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில், கருநாடக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராமலிங்கம் (ரெட்டி) பெங்களூரு வடிகால் வாரிய அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனை கூட்டத்துக்குப் பின்னர், ராமலிங்க (ரெட்டி) செய்தியாளர் களிடம் கூறியதாவது:

பெங்களூரு மாநகரில் உள்ள கால் வாய்கள் வாயிலாக தினசரி 2,825 எம்எல்டி கழிவு நீர் வெளியேறுகிறது. இதில், 1,364.5 எம்எல்டி கழிவு நீர், 37 சுத்திகரிப்பு மய்யங்கள் மூலம் சுத்திகரிக்கப்படுகிறது.

பின்னர், சுத்திகரிக்கப்பட்ட நீர் கோலார், சிக்கப்பள்ளாப்பூர், துமக்கூரு ஆகிய அண்டை மாவட்டங்களின் விவசாய தேவைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

சுத்திகரிக்க நடவடிக்கை

மீதமுள்ள 47 சதவீத சுத்திகரிப்பு செய்யப்படாத கழிவு நீர் ரிஷபாவதி ஆற்றில் கலந்து கனகபுரா அருகேயுள்ள சங்கமத்தில் காவிரி ஆற்றில் கலந்து தமிழ்நாட்டிற்கு செல்கிறது. அதேபோல், சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் தென்பெண்ணை ஆற்றில் கலந்து தமிழ்நாட்டிற்கு செல்கிறது.

தமிழ்நாட்டிற்கு செல்லும் சுத்திகரிப்பு செய்யப்படாத கழிவு நீரை சுத்திகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதற்காக, 43 சுத்திகரிப்பு மய்யங்களை புதிதாக உருவாக்க இருக்கிறோம். அதன்மூலம், 1,174 எம்எல்டி நீரை சுத்திகரிக்க இயலும். பசுமை தீர்ப்பாயம் வெளியிட்டுள்ள தர நிர்ணய அளவுடன் இந்த சுத்திகரிப்பு மையங்கள் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் ராமலிங்கம் (ரெட்டி) தெரிவித்தார். காவிரி, தென்பெண்ணை ஆகிய ஆறுகளில் கர்நாடக அரசு கழிவு நீரை கலந்து வருவதாக தமிழக அரசும், விவசாய அமைப்புகளும் நீண்ட காலமாக குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில், கருநாடக அமைச்சரே அதனை ஒப்புக் கொள்ளும் வகையில் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *