சென்னை, செப்.9 தமிழ்நாட்டில் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் மதுராந்தகம் தொகுதியில் வழக்குரைஞர் அய். பரந்தாமன், தாராபுரத்தில் வழக்குரைஞர் எஸ். சுகன்யா போட்டியிடுவார்கள் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில், முக்கிய கட்சித் தலைவர்கள் அவரது வீட்டில் இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுவது குறித்து இன்று (9.9.2026) ஆலோசனை நடத்தினர்.
ஆலோசனைக்குப் பின் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், வரும் அக். 6-ஆம் தேதி தமிழ்நாட்டில் நடை பெறவிருக்கும் மதுராந்தகம் (தனி) பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் வழக்குரைஞரும் திமுக சட்டத்துறை இணைச் செயலாளருமான அய். பரந்தாமன் போட்டியிடுவார். அதுபோல, தாராபுரம் (தனி) பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் வழக்குரைஞர் எஸ். சுகன்யா போட்டியிடுவார் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
