புஞ்சை புளியம்பட்டியின் முதுபெரும் திராவிடர் இயக்க செயல் வீரரும், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் போன்றவர்களின் பேரன்பைப் பெற்ற வருமான மறைந்த மேனாள் நாடாளு மன்ற உறுப்பினர் தோழர் பி.ஏ.சாமிநாதன் அவர்களது வாழ்விணையர் திருமதி சம்பூர்ணம் சாமிநாதன் அவர்கள் (வயது 87) காலமானார் நேற்று (1.9.2026) என்ற செய்தி அறிந்து மிகவும் துயரம் அடைகிறோம்.
‘மிசா’ காலத்தில் அவரது துணைவரும், தோழர்களும் சிறைச் சாலையில் இருந்தபோது, துணிந்து வெளியே வந்து தி.மு.கழக செயல் வீராங்கனையாகப் பணிபுரிந்தவர்! தொடர்ந்து தாய்க் கழகத்திடமும் அன்புடன் தொண்டாற்றிய பெருமாட்டியாவார்.
அவரது மறைவு திராவிட இயக்கத்திற்கு ஈடு செய்ய இயலாத பெரும் இழப்பு ஆகும்.
அவரது மறைவால் துயருறும் அவரது குடும்பத்தினர், குறிப்பாக மகன் பி.எஸ். அன்பு மற்றும் மகள்கள், உறவினர்களுக்கு நமது தேறுதல். மறைந்தவருக்கு நமது ஆழந்த இரங்கல், வீர வணக்கம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
2.09.2026
