சோழிங்கநல்லூர் மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

இணையவழி கையெழுத்து இயக்கம்

விடுதலைநகர், ஆக. 31– திராவிடர் கழகத்தின் சோழிங்கநல்லூர் மாவட்டத்தின் சார்பில், ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வரும் மாவட்டக் கலந்துரை யாடல் கூட்டம், வரும் 06.09.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணியளவில், விடுதலை நகர், சுண்ணாம் புக்குளத்தூர் நூலகத்தில் நடைபெற உள்ளது.

இக்கூட்டம் மாவட்டச் செயலாளர் தோழர் க. தமிழினியன் தலைமையிலும், மாவட்டக் காப்பாளர் தோழர் நீலாங்கரை ஆர்.டி. வீரபத்திரன் முன்னிலையிலும் நடை பெறுகிறது.

வரும் 17.09.2026 அன்று நடைபெறவுள்ள தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவைச் சோழிங்கநல்லூர் மாவட்டத்தில் சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகள், நிகழ்ச்சி நிரல் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப்பட உள்ளது.

மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் அனைவரும் இக்கூட்டத்தில் தவறாது பங்கேற்று, தங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் வழங்கி, தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவைச் சிறப்பாக நடத்துவதற்கு முழுமையான ஒத்து ழைப்பை வழங்குமாறு மாவட்டத் தலைவர் வேலூர் பாண்டு கேட்டுக் கொண்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *