திரைப்படங்கள் மூலம் தந்தை பெரியாரின் பகுத்தறிவு கருத்துகளை எடுத்துக் கூறிய நகைச்சுவை வேந்தர் கலை வாணர் என். எஸ். கிருஷ்ணன் அவர்களுடைய நினைவு நாளான இன்று 30.8.2026 நாகர்கோவில் மணிக்கூண்டு சந்திப்பில் உள்ள கலைவாணர் சிலைக்கு குமரி மாவட்ட மாவட்ட தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் முன்னிலை வைத்தார். மாவட்ட கழகத் துணைத் தலைவர் ச.நல்லபெருமாள், நாகர்கோவில் மாநகரத் தலைவர் ச.ச.கருணாநிதி, மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.அலெக்சாண்டர், கழக தோழர்கள் ஞா.பிரான்சிஸ், மு.பால்மணி, மு.குமரிச் செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டு கலந்து கலைவாணருக்கு வீரவணக்கம் செலுத்தினர்.
