முனுஆதி மகனும், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினருமான ஆதி.மாறன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்தார். உடன்: காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிவராமன், கிருஷ்ணமூர்த்தி (சிபிஅய்(எம்), ஜீவா (சிபிஅய்). (சென்னை, 28.08.2026)

’நீட்’ தேர்வு எதிர்ப்புப் போராளி அரியலூர் அனிதாவின் 9 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுக்கு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு, அனிதாவின் சகோதரர் மணிரத்னம் அழைப்பு விடுத்தார். உடன்: தமிழ்நாடு மாணவர் இளைஞர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கசாலி மீரன், நீட் எதிர்ப்புக் கூட்டியக்கத்தின் பொறுப்பாளர் தனசேகரன், மாணவர் இந்தியா அமைப்பின் பொறுப்பாளர் பஷீர். (சென்னை, 27.08.2026)

தாராபுரம் தி.மு.க. கிளைச்செயலாளர் சுப்பிரமணியன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு பயனாடை அணிவித்தார்.. உடன்: தி.மு.கழகத் தோழர்கள். (சென்னை, 27.08.2026)

’திராவிட மக்கள் சமூகநீதிப் பேரவை’ நிறுவனத் தலைவர் புலவர் திராவிட தாசன் எழுதிய, “தொண்டு செய்த பழுத்த பழம்” எனும் புத்தகத்தை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்டார். (சென்னை, 27.08.2026)
