ஓய்வூதியர்கள் ஒளிப்படத்துடன் கூடிய விவரங்களை கருவூலத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தல்

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

திண்டுக்கல், ஆக.28 திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் தங்களது மற்றும் நாமினியின் அண்மைய ஒளிப்படங்களுடன் கூடிய விவரங்களை மாவட்டக் கருவூலத் துறையில் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் கடந்த ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் இத்திட்டத்தை ‘யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ்’ நிறுவனம் மூலம் செயல்படுத்த அரசு புதிய ஒப்பந்தம் செய்துள்ளது. பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 6,800 ஓய்வூதியர்கள், தாங்கள் நாமினியாகப் பதிவு செய்துள்ள கணவன் அல்லது மனைவியின் அண்மைய பாஸ்போர்ட் அளவிலான ஒளிப்படத்தையும், இதர விவரங்களையும் மாவட்டக் கருவூலத்துறையில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நாமினியாகப் பதிவு செய்யப்பட்டுள் ளவரின் ஒளிப்படம் மற்றும் விவரங்கள் கருவூலத்துறையில் பதிவானால், ஓய்வூதியதாரருக்கு எதிர்பாராதவிதமாக உயிரிழப்பு ஏற்படும் பட்சத்தில், அந்த விவரங்கள் பதிவான அடுத்த நிமிடமே தானியங்கி தொழில்நுட்பம் மூலம் ஓய்வூதியம் குடும்ப ஓய்வூதியர் பெயருக்கு உடனடியாக மாற்றப்படும். எனவே, ஓய்வூதியதாரர்கள் தயங்காமல் இந்தப் பதிவை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட கருவூலத்துறை அலுவலர் கார்த்திகேயன் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *