செப். 30 வரை குழந்தைகள் ஆதார் புதுப்பிப்பிற்கு கட்டணமில்லை

இணையவழி கையெழுத்து இயக்கம்

புதுடில்லி, ஆக. 26 நாடு முழுவதும் இதுவரை 2 கோடி பள்ளி மாணவர் களின் ஆதார் பயோ-மெட்ரிக்கை புதுப்பித்துள்ளதாக ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச் சகம் தெரிவித்துள்ளது.

மேலும், வருகின்ற செப்டம்பர் 30-ஆம் தேதி வரை, குழந்தைகளின் பயோ-மெட்ரிக்களை இலவசமாகப் புதுப்பித்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு ஒளிப்படம் மற்றும் அடிப்படை விவரங்கள் மட்டும் கொண்டு ‘பால் ஆதார் அட்டை’ (Baal Aadhaar) வழங்கப்படுகிறது. இவர்களுக்கு கைரேகை மற்றும் கருவிழி பதிவு செய்யப்படுவதில்லை.

இவர்கள் 5 வயதைக் கடக்கும்போது ஆதார் மய்யங்களுக்கு நேரடியாகச் சென்று கைரேகைகள், கருவிழிகள் மற்றும் பிற பயோமெட்ரிக் விவரங் களைப் பதிவு செய்வது அவசியம். பின்னர், 15 வயதில் மீண்டும் பயோ-மெட் ரிக்கை அப்டேட் செய்ய வேண்டும்.

இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 2025-ஆம் ஆண்டு, பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று மாணவர்களின் பயோ-மெட்ரிக்களை அப்டேட் செய்யும் பணிகளை ஒன்றிய அரசு தொடங்கியது. மாநில அரசுகளுடன் ஒன்றிணைந்து இதுவரை 1.56 லட்சம் பள்ளிகளில் ஆதார் புதுப்பிப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, இதுவரை 2 கோடி மாணவர்களுக்கு ஆதார் பயோ-மெட்ரிக் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

5 வயது முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்கு, செப்டம்பர் 30-ஆம் தேதி வரை பயோமெட்ரிக்கை புதுப்பிக்க இலவசம். கடந்த செப்டம்பர், 2025 முதல் ஓராண்டுக்கு பயோ-மெட்ரிக் புதுப்பிப்பு கட்டணத்தை ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. குழந்தைகள் பயோமெட்ரிக் விவரங்களைப் புதுப்பித்து வைத்திருப்பது, அவர்கள் உயர்கல்வி நிலைகளை அடையும் போது, ஆதார் அட்டை தேவைப்படும் சூழலில் ஏற்படும் அங்கீகாரச் (authentication) சிக்கல்களைக் குறைக்க உதவும். அரசின் கல்வித் தொகை, கல்வி தொடர்பான திட்டங்கள் மற்றும் சலுகைகளைப் பெறுவதற்கும், நீட், ஜேஇஇ, க்யூட் போன்ற நுழைவுத் தேர்வுகளை எழுதும்போதும் ஆதார் அட்டை கட்டாயம் தேவை.

ஆதார் பயோமெட்ரிக் புதுப்பிப்பை இணையவழியாகச் செய்ய முடியாது. குழந்தைகளைப் பெற்றோர் ஆதார் மய்யத்துக்கு அழைத்துச் சென்றுதான் புதுப்பிக்க முடியும். அருகிலுள்ள ஆதார் மய்யத்தை ‘புவன் ஆதார் போர்டல்’ (Bhuvan Aadhaar Portal) மூலம் கண்டறியலாம்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *