பிந்தேஷ்வரி பிரசாத் மண்டல், சுருக்கமாக பி.பி. மண்டல் (1918-1982), இந்திய அரசியலில் சமூக நீதிக்கான போராட்டத்தில் ஒரு முக்கியப் பங்கினை ஆற்றியவர். இவர் இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்தவர். அந்த ஆணையம் இவரது பெயராலேயே மண்டல் கமிஷன் என அழைக்கப்படலாயிற்று. இவரது அறிக்கை, இந்தியாவில் இட ஒதுக்கீடு குறித்த விவாதங்களை முழுவதுமாக மாற்றி அமைத்தது.
பி. பி. மண்டல், 1952 முதல் 1972 வரை பல்வேறு காலங்களில் பீகார் சட்டமன்ற உறுப்பினராகவும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றி யுள்ளார்.
இவர் 1968 ஆம் ஆண்டு பீகாரின் முதலமைச் சராகவும் சில காலம் பதவி வகித்தார். அரசியல் வாதியாக இவர் தனது சமூக நீதிக் கொள்கை களுக்காகவும், பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் மேம்பாட்டிற்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.
மண்டல் ஆணையம் உருவாக்கம்
1979 ஆம் ஆண்டு அப்போதைய இந்தியப் பிரதமர் மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா கட்சி அரசு மண்டல் அவர்களை இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக நியமித்தது. இதற்கு முன்னதாக, 1953 ஆம் ஆண்டு காக்கா கர்லேல்கர் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தின் பரிந்துரைகள் நடைமுறைக்கே வராத நிலையில், மண்டல் ஆணையம் நியமிக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் முக்கிய நோக்கம், சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடையாளம் காண்பதும், அவர்களுக்கான மேம்பாட்டு நட வடிக்கைகளை பரிந்துரைப்பதுமாகும்.
மண்டல் ஆணையத்தின்
அறிக்கையும் பரிந்துரைகளும்
மண்டல் ஆணையம் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆய்வு செய்து, தனது அறிக்கையை 1980-இல் சமர்ப்பித்தது. இந்த அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள்:
இந்தியாவில் உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மக்கள் தொகை சுமார் 52% என்றும், 3,743 வெவ்வேறு ஜாதிகளைப் பிற்படுத்தப் பட்டோராகவும் ஆணையம் கண்டறிந்தது.
ஒன்றிய, மாநில அரசு வேலைகளில் பிற்படுத்தப் பட்ட வகுப்பினருக்கு குறைந்தபட்சம் 27% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மண்டல் ஆணையம் பரிந்துரைத்தது. இதன் மூலம், ஏற்கனவே உள்ள தாழ்த்தப்பட்டோர் (SC) மற்றும் பழங்குடியினர் (ST) இட ஒதுக்கீட்டுடன் சேர்த்து, மொத்த இட ஒதுக்கீடு 50% ஆக உயரும்.
மண்டல் ஆணையத்தின் அறிக்கை 1980 இல் சமர்ப்பிக்கப்பட் டாலும், அதனை நடைமுறைப்படுத்து வதில் நீண்ட தாமதம் ஏற்பட்டது. 1990ஆம் ஆண்டு, வி.பி. சிங் தலை மையிலான தேசிய முன்னணி அரசு மண்டல் ஆணையத்தின் பரிந் துரைகளை ஏற்று, ஒன்றிய அரசு வேலைகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவித்தது.
ஆணையம் தனது பரிந்துரைகளை வழங்கி னாலும், அதைச் செயல்படுத்த வைக்க வேண் டியது பெரியார் இயக்கத்தின் கைகளில் தான் இருக்கிறது என்று பி.பி. மண்டல், பெரியார் திடலில் உரையாற்றும் போது தெரிவித்தார்.
அதற்கேற்ப மண்டல் ஆணையத்தின் பரிந்துரை களை நாடாளுமன்றத்தில் வைக்கவும், பின்னர் அதனைச் செயல்படுத்தவும் திராவிடர் கழகம் 16 போராட்டங்களையும், 42 மாநாடுகளையும் நடத்தி மக்களைத் திரட்டி அரசை அதனை நோக்கி நகர்த்தியது.
மண்டல் ஆணையத்தின் அறிக்கை, இந்திய அரசியலிலும், சமூகத்திலும் ஒரு புதிய அத்தியா யத்தைத் தொடங்கியது. இன்றும் மண்டல் காற்று பலமாக வீசிக் கொண்டிருக்கிறது.
ந்தேஷ்வரி பிரசாத் மண்டல், சுருக்கமாக பி.பி. மண்டல் (1918-1982), இந்திய அரசியலில் சமூக நீதிக்கான போராட்டத்தில் ஒரு முக்கியப் பங்கினை ஆற்றியவர். இவர் இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்தவர். அந்த ஆணையம் இவரது பெயராலேயே மண்டல் கமிஷன் என அழைக்கப்படலாயிற்று. இவரது அறிக்கை, இந்தியாவில் இட ஒதுக்கீடு குறித்த விவாதங்களை முழுவதுமாக மாற்றி அமைத்தது.
பி. பி. மண்டல், 1952 முதல் 1972 வரை பல்வேறு காலங்களில் பீகார் சட்டமன்ற உறுப்பினராகவும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றி யுள்ளார்.
இவர் 1968 ஆம் ஆண்டு பீகாரின் முதலமைச் சராகவும் சில காலம் பதவி வகித்தார். அரசியல் வாதியாக இவர் தனது சமூக நீதிக் கொள்கை களுக்காகவும், பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் மேம்பாட்டிற்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.
மண்டல் ஆணையம் உருவாக்கம்
1979 ஆம் ஆண்டு அப்போதைய இந்தியப் பிரதமர் மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா கட்சி அரசு மண்டல் அவர்களை இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக நியமித்தது. இதற்கு முன்னதாக, 1953 ஆம் ஆண்டு காக்கா கர்லேல்கர் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தின் பரிந்துரைகள் நடைமுறைக்கே வராத நிலையில், மண்டல் ஆணையம் நியமிக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் முக்கிய நோக்கம், சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடையாளம் காண்பதும், அவர்களுக்கான மேம்பாட்டு நட வடிக்கைகளை பரிந்துரைப்பதுமாகும்.
மண்டல் ஆணையத்தின்
அறிக்கையும் பரிந்துரைகளும்
மண்டல் ஆணையம் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆய்வு செய்து, தனது அறிக்கையை 1980-இல் சமர்ப்பித்தது. இந்த அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள்:
இந்தியாவில் உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மக்கள் தொகை சுமார் 52% என்றும், 3,743 வெவ்வேறு ஜாதிகளைப் பிற்படுத்தப் பட்டோராகவும் ஆணையம் கண்டறிந்தது.
ஒன்றிய, மாநில அரசு வேலைகளில் பிற்படுத்தப் பட்ட வகுப்பினருக்கு குறைந்தபட்சம் 27% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மண்டல் ஆணையம் பரிந்துரைத்தது. இதன் மூலம், ஏற்கனவே உள்ள தாழ்த்தப்பட்டோர் (SC) மற்றும் பழங்குடியினர் (ST) இட ஒதுக்கீட்டுடன் சேர்த்து, மொத்த இட ஒதுக்கீடு 50% ஆக உயரும்.
மண்டல் ஆணையத்தின் அறிக்கை 1980 இல் சமர்ப்பிக்கப்பட் டாலும், அதனை நடைமுறைப்படுத்து வதில் நீண்ட தாமதம் ஏற்பட்டது. 1990ஆம் ஆண்டு, வி.பி. சிங் தலை மையிலான தேசிய முன்னணி அரசு மண்டல் ஆணையத்தின் பரிந் துரைகளை ஏற்று, ஒன்றிய அரசு வேலைகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவித்தது.
ஆணையம் தனது பரிந்துரைகளை வழங்கி னாலும், அதைச் செயல்படுத்த வைக்க வேண் டியது பெரியார் இயக்கத்தின் கைகளில் தான் இருக்கிறது என்று பி.பி. மண்டல், பெரியார் திடலில் உரையாற்றும் போது தெரிவித்தார்.
அதற்கேற்ப மண்டல் ஆணையத்தின் பரிந்துரை களை நாடாளுமன்றத்தில் வைக்கவும், பின்னர் அதனைச் செயல்படுத்தவும் திராவிடர் கழகம் 16 போராட்டங்களையும், 42 மாநாடுகளையும் நடத்தி மக்களைத் திரட்டி அரசை அதனை நோக்கி நகர்த்தியது.
மண்டல் ஆணையத்தின் அறிக்கை, இந்திய அரசியலிலும், சமூகத்திலும் ஒரு புதிய அத்தியா யத்தைத் தொடங்கியது. இன்றும் மண்டல் காற்று பலமாக வீசிக் கொண்டிருக்கிறத
ந்தேஷ்வரி பிரசாத் மண்டல், சுருக்கமாக பி.பி. மண்டல் (1918-1982), இந்திய அரசியலில் சமூக நீதிக்கான போராட்டத்தில் ஒரு முக்கியப் பங்கினை ஆற்றியவர். இவர் இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்தவர். அந்த ஆணையம் இவரது பெயராலேயே மண்டல் கமிஷன் என அழைக்கப்படலாயிற்று. இவரது அறிக்கை, இந்தியாவில் இட ஒதுக்கீடு குறித்த விவாதங்களை முழுவதுமாக மாற்றி அமைத்தது.
பி. பி. மண்டல், 1952 முதல் 1972 வரை பல்வேறு காலங்களில் பீகார் சட்டமன்ற உறுப்பினராகவும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றி யுள்ளார்.
இவர் 1968 ஆம் ஆண்டு பீகாரின் முதலமைச் சராகவும் சில காலம் பதவி வகித்தார். அரசியல் வாதியாக இவர் தனது சமூக நீதிக் கொள்கை களுக்காகவும், பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் மேம்பாட்டிற்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.
மண்டல் ஆணையம் உருவாக்கம்
1979 ஆம் ஆண்டு அப்போதைய இந்தியப் பிரதமர் மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா கட்சி அரசு மண்டல் அவர்களை இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக நியமித்தது. இதற்கு முன்னதாக, 1953 ஆம் ஆண்டு காக்கா கர்லேல்கர் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தின் பரிந்துரைகள் நடைமுறைக்கே வராத நிலையில், மண்டல் ஆணையம் நியமிக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் முக்கிய நோக்கம், சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடையாளம் காண்பதும், அவர்களுக்கான மேம்பாட்டு நட வடிக்கைகளை பரிந்துரைப்பதுமாகும்.
மண்டல் ஆணையத்தின்
அறிக்கையும் பரிந்துரைகளும்
மண்டல் ஆணையம் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆய்வு செய்து, தனது அறிக்கையை 1980-இல் சமர்ப்பித்தது. இந்த அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள்:
இந்தியாவில் உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மக்கள் தொகை சுமார் 52% என்றும், 3,743 வெவ்வேறு ஜாதிகளைப் பிற்படுத்தப் பட்டோராகவும் ஆணையம் கண்டறிந்தது.
ஒன்றிய, மாநில அரசு வேலைகளில் பிற்படுத்தப் பட்ட வகுப்பினருக்கு குறைந்தபட்சம் 27% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மண்டல் ஆணையம் பரிந்துரைத்தது. இதன் மூலம், ஏற்கனவே உள்ள தாழ்த்தப்பட்டோர் (SC) மற்றும் பழங்குடியினர் (ST) இட ஒதுக்கீட்டுடன் சேர்த்து, மொத்த இட ஒதுக்கீடு 50% ஆக உயரும்.
மண்டல் ஆணையத்தின் அறிக்கை 1980 இல் சமர்ப்பிக்கப்பட் டாலும், அதனை நடைமுறைப்படுத்து வதில் நீண்ட தாமதம் ஏற்பட்டது. 1990ஆம் ஆண்டு, வி.பி. சிங் தலை மையிலான தேசிய முன்னணி அரசு மண்டல் ஆணையத்தின் பரிந் துரைகளை ஏற்று, ஒன்றிய அரசு வேலைகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவித்தது.
ஆணையம் தனது பரிந்துரைகளை வழங்கி னாலும், அதைச் செயல்படுத்த வைக்க வேண் டியது பெரியார் இயக்கத்தின் கைகளில் தான் இருக்கிறது என்று பி.பி. மண்டல், பெரியார் திடலில் உரையாற்றும் போது தெரிவித்தார்.
அதற்கேற்ப மண்டல் ஆணையத்தின் பரிந்துரை களை நாடாளுமன்றத்தில் வைக்கவும், பின்னர் அதனைச் செயல்படுத்தவும் திராவிடர் கழகம் 16 போராட்டங்களையும், 42 மாநாடுகளையும் நடத்தி மக்களைத் திரட்டி அரசை அதனை நோக்கி நகர்த்தியது.
மண்டல் ஆணையத்தின் அறிக்கை, இந்திய அரசியலிலும், சமூகத்திலும் ஒரு புதிய அத்தியா யத்தைத் தொடங்கியது. இன்றும் மண்டல் காற்று பலமாக வீசிக் கொண்டிருக்கிறது.
