வாசிங்டன், ஆக.21- ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வரும் 29 ஆம் தேதி நியூயார்க்கில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க செல்ல உள்ளார். இந்நிலை யில், பன்னாட்டு மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்தின் தலைவர் ஆசிப் மஹ்மூத் மற்றும் ஆணையர் ஜீன் மில்ஸ் ஆகியோர் ஆர்எஸ்எஸ் அமைப்பு மீது அமெரிக்காவில் பொருளாதார தடை விதிக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர். அவர்களின் கருத்துகள், ஆணையத்தின் அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ தளத்தில் நேற்று (20.8.2026) பதி விடப்பட்டது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்திய பிரதமர் மோடி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உறுப்பினராக உள்ளார். இந்த அமைப்பு பல துணை அமைப்புகளை கொண்டது. அந்த துணை அமைப்புகள் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் உள்ளிட்ட மத சிறுபான்மையினர் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளன. இப்போது ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் அமெரிக்கா வர திட்டமிட்டுள்ளார். முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வன்முறைச் செயல்களிலிருந்து பகவத்தின் வரு கையை தனிமைப்படுத்திப் பார்க்க முடியாது.
அமெரிக்க அரசு
கவனம் செலுத்த வேண்டும்
எனவே, ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் இந்திய அரசாங்கத்துடன் தொடர்பு டையவர்களாக இருந்தாலும், அவர்க ளுக்கு உயர்மட்ட சந்திப்புகள் அல்லது ராஜதந்திர மரியாதைகள் மூலம் கவுரவம் அளிக்கப்படக் கூடாது. அதற்குப் பதிலாக மத நம்பிக்கை சுதந்திரம் மீறல்களுக்குப் பொறுப்பானவர்களாகக் கண்டறியப்படும் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் மீது தடை விதிப்பதில் அமெரிக்க அரசு கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
